Thursday, April 15, 2010

உடல் இளைக்க...

அமுக்கிராங்கிழங்கு கால் கிலோ எடுத்துகோங்க... அதை நல்லா காய வச்சி பொடியாக்குங்க . பிறகு , ஒரு பாத்திரத்தில பால் ஊத்தி தேவையான அளவு தண்ணி ஊத்தி அதுக்கு மேல வேடு கட்டி ( பாத்திரத்தின் வாய் பகுதியில் துணியைக் கட்டி வைப்பது ) அதுக்கு மேல அமுக்கிராங்கிழங்கு பொடியை வச்சு அவிக்கணும் . நல்லா ஆவி வந்ததும் இறக்கி வச்சு சூடு ஆறினதும் திரும்பவும் பொடியாக்கி வச்சிக்கிடணும் . அதுல கால் ஸ்பூன் எடுத்து கொஞ்சம் தேன் சேர்த்து காலையிலும் சாயங்காலமும் வெறும் வயித்துல சாப்பிடணும் . இதை ஒரு மண்டலமோ , ரெண்டு மண்டலமோ சாப்பிடுங்க . பருத்த தேகம் நாளடைவுல மெலிஞ்சுடும் .
--- அன்னமேரி பாட்டி , அவள் விகடன் 23 . 10 . 2009 . இதழ் உதவி : k. மகேஷ்குமார் , திருநள்ளாறு .

No comments: