Tuesday, December 7, 2010

வழிபாட்டு பாடல் !

வாழ்வில் நமக்கு ஏற்படும் ஒவ்வொரு அனுபவமும் அவசியம்தான் என்பதற்கு, திருமுருகன் வழிபாட்டு பாடல் ஒன்று அற்புதமான விளக்கமாக அமைந்துள்ளது...
' ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று
ஈசனொடு ஞானமொழி பேசும் முகம் ஒன்று
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறுபடு அசுரரை வென்ற முகம் ஒன்று
வள்ளியை மணம்புணர வந்த முகம் ஒன்று
ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே ! '
இந்தப் பாடலை மேலோட்டமாகப் பார்த்தால், திருமுருகனின் ஆறு முகங்களைப் போற்றித் துதிக்கும் பாடலாகத் தொன்றும்.
சிறிது ஆழ்ந்து சிந்தித்தால், இதற்குள் அருமையான வாழ்க்கை வழிகாட்டுதல் ஒளிர்வது புரியும் : மயிலேறி விளையாடுதல், குழந்தை நிலை; ஞானமொழி பேசுதல், ஞானியின் நிலை; அடியார்கள் வினைதீர்த்தல், அபயமளித்து ஆதரிக்கும் நிலை; ( அன்னை சக்தியிடம் ) வேல் வாங்கிய நிலை, தீமையை அழிக்க பெரியோர் துணைதேடிய நிலை; அசுரரை அழித்தல், தர்மத்தை நிலைநாட்டிய நிலை; திருமணம் செய்தல், குடும்ப வாழ்ககை நிலை.!
' குழந்தையாய் இரு, ஞானியாய் இரு, துன்பப்படுவோரை ஆதரித்து உதவுபவனாய் இரு, தீமையை அழிக்க பெரியோர் துணை தேடு, தர்மத்தை நிலைநாட்டு... இனிய வாழ்க்கை அமையும் ! ' என்பதே இந்த போற்றிப்பாடல் சொல்லாமல் சொல்லும் வாழ்க்கை வழிகாட்டுதல் !
--- பூஜ்யா . தினமலர் , 03. 07. 2010.

No comments: