Monday, December 27, 2010

பறவை ஜோக் !

ஒருவர் இரண்டு பெண் கிளிகளை வளர்த்து வந்தார் . அவை இரண்டும் எப்போதும் குளுகிளுப்பான சினிமா பாடல்களையே பாடிக்கொண்டிருக்கும் அதனால் நொந்துபோன அவர் , ஒரு துறவியைப் போய்ப் பார்த்தார் . அவரிடம் இரண்டு ஆண் கிளிகள் இருந்தன . அவை எப்போதும் தியானத்தில் இருந்தபடியே கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் .
விஷயத்தைக் கேட்ட முனிவர் , ' கவலைப்படாதே என்னுடைய இரண்டு ஆண் கிளிகளையும் நீ சில நாட்களுக்கு அழைத்துச் செல் . அவற்றுடன் பழகினால் உன் கிளிகளும் சமர்த்தாக மாறிவிடும் ' என்று கொடுத்து அனுப்பினார் .
வழக்கம் போல் ஆண் கிளிகள் கண்களை மூடி தவத்தில் இருந்தபோது , " அழகிய அசுரா , அழகிய அசுரா அத்துமீற ஆசை இல்லையா ? " என்று அந்த இரண்டு பெண் கிளிகளும் செக்ஸியான குரலில் பாடி உசுப்பேற்றின .
அந்த சப்த்த்தில் திடுக்கென கண் விழித்த ஆண் கிளிகள் , " ங்கொய்யால , இத்தனை நாளாக கடவுள்கிட்ட எதுக்குப் பிராத்தனை பண்ணினோமோ அது பலிச்சிடுச்சுடா " என்று கத்தியபடியே பெண் கிளிகள் மீது பாய்ந்தன .
--- அரசு பதில்கள் . குமுதம் . 07. 07. 2010.

2 comments:

ramalingam said...

குமுதம் இன்னும் இதே லெவலில்தான் இருக்கிறதா!

க. சந்தானம் said...

அன்பு ராமலிங்கம் , அவர்களுக்கு ! நன்று சொன்னீர்கள் நன்றி !