Saturday, December 11, 2010

சண்டிகேஸ்வரர் .

எப்பொழுதும் சிவ தியானத்திலேயே இருப்பவர் சண்டிகேஸ்வரர். சிவ பூஜைக்கும், தியானத்திற்கும் இடையூறு விளைவிப்பவர் யாராயினும் அவரைக் கோபத்துடன் தண்டிப்பவர்.
இதனாலேயே ' சிவ நிந்தகரிபு ' என்று ஒரு பெயர் உண்டு.
இவரது இயற்பெயர் ' விசாரசருமர் '. சிவ பூஜைக்கு இடையூறு செய்த தமது தந்தையின் கால்களை மிகுந்த கோபத்துடன் துண்டித்தார். இதனால் இவருக்கு' சண்டிகேஸ்வரர் ' எனப் பெயர் வரலாயிற்று. ( சண்ட = கோபம் ).
சிவபெருமானுக்கு பூஜித்த மலர்களையே ( சிவ நிர்மால்யம் ) இவர் ஏற்றுக் கொள்வார். சிவபெருமானுக்கு நிவேதனம் செய்த உணவையே தமக்கு ஏற்றுக் கொள்வார். இவையனைத்துமே இவரது பக்தியை பாராட்டி சிவபெருமான் அருளியவையாகும்.
--- தினமலர், ஏப்ரல் 8 . 2010.

No comments: