Friday, December 31, 2010

மேஜிக் !

* பார்வையால் அல்லது ஆழ் மனத்தின் சக்தியால் ஒரு பொருளைத் தொடாமலேயே நகர்த்தும் சக்திக்கு சைக்கோகைனசிஸ் என்று பெயர் .அதைப் பயன்படுத்தி 19 -ம் நூற்றாண்டைக் கலக்கியவர் டேனியல் டங்க்ளஸ் ஹ்யூம் .
* நமக்குச் சுத்தமா இதுவரைக்கும் சம்பந்தமே இல்லாத ஒரு மொழியை மந்திரம் போட்டுவிட்டது மாதிரி திடீரென்று பேசினால் , அதுதான் ஜெனோக்லாஸி ( Xenoglossy ) . இதை அறிவியலுடனும் இன்னும் சிலர் கடவுளுடனும் சம்பந்தப்படுத்துவது உண்டு .
* ஜெனோக்லாஸி என்ற ஒன்றை இதுவரை உண்மை என்றோ , பொய் என்றோ உலகம் ஒப்புக்கொள்ளவில்லை . ஆனால் , வாழ்வில் முன் எப்போதும் , எந்த வடிவத்திலும் அறிந்திடாத ஒரு மொழியைத் திடீரென்று கடகடவெனப் பேசுவது துளியும் சாத்தியம் இல்லை என்பதே ஆய்வாளர்களின் இறுதி முடிவு !
* கண்ணுக்கு முன்னே நடக்காத அல்லது இன்னமும் நடக்க ஆரம்பிக்காத ஒரு நிகழ்வை மனக் கண்ணில் பார்ப்பது என்பது ஈ. எஸ். பி - கான ( ' எக்ஸ்ட்ரா சென்ஸரி பெர்ஸ்ப்ஷன் ' ) சிம்பிள் விளக்கம் . சம்பந்தப்பட்ட நபர் அந்த இடத்தில் இல்லாமலேயே இதைப் பார்ப்பதுதான் இன்னும் அதிசயம் . ' ஆறாவது அறிவை ' முழுமையாகப் பயன்படுத்தினால் ஈ.எஸ்.பி.
திறன் வெளிப்படும் ' என்பது நிறைய ஆராய்ச்சியாளர்களின் வாதம் . பொதுவாக , விலங்குகளுக்கு ' இன்ஸ்டிங்க்ட் ' எனப்படும் உள்ளுணர்வு அதிகமாக இருக்கும் . ஆபத்து வரப்போவதை அறிவது இதை வைத்துதான் . நவீன மருத்துவத்தில் நாய்களுக்குப் பயிற்சி கொடுத்து , காக்கா வலிப்பு வந்தவர்களுக்கு உதவியாக அனுப்புகிறார்கள் . அவை , அவர்களுக்கு வலிப்பு வரும் முன்பே அறிகுறிகளை உணர்ந்து நோயாளிகளுக்கு உணர்த்தும் . தேவையான மருந்துகள் மூலம் முங்கூட்டியே உஷார் ஆகலாம் .
--- மேஜிக் விகடன் , இணைப்பு . 2. 6 .10 .

No comments: