Tuesday, January 3, 2012

ஆஹா ...!

* மார்பில் வலி என்று ஒருவர் கூறினால், அது மாரடைப்பாகக் கூட இருக்க முடியும் . அந்த வலி வந்த முதல் ஒரு மணி நேரத்துக்கு ' கோல்டன் அவர் ' என்று பெயர் . அந்தச் சமயத்தில் வலி இருக்கும் நபரின் நாக்கு அடியில் ' சார்பிட்ரேட் ' மாத்திரையை வைத்து, அவரை குலுக்காமல் கார் ( அ ) டாக்ஸி போன்றவற்றில் வைத்து ( ஆட்டோ கண்டிப்பாக
வேண்டாம் ) அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால் மருத்துவர்கள் காப்பாற்ற ஏதுவாக இருக்கும் . அந்த சமயத்தில் குடிக்க, சாப்பிட எதுவும் கொடுக்கக் கூடாது . விரைந்து செயல்படுவதே முக்கியம் . வலி உள்ள நபரின் முன் அழுவது போன்றவற்றைத் தவிர்த்தால் அவரது இரத்த அழுத்தம் எகிறாது .
* குதிகால் வலியால் அவதிப்படுவதைத் தடுக்க, ஒரு பெரியவர் சொன்னது : சாம்பார் வெங்காயச் சாற்றுடன் கடுகு எண்ணெய்யைக் கலந்து வலி உள்ள குதிகாலில் தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம் .
* பஜ்ஜி பண்ணுவதற்கு மாவு கரைக்கிறீர்களா ? எண்ணெய் காய்ந்தயுடன் அந்த எண்ணெயை ஒரு சின்னக் கரண்டியால் எடுத்து பஜ்ஜி மாவில் விட்டுக் கலந்து பஜ்ஜி தோய்த்துப் போட்டுப் பாருங்கள் . பஜ்ஜி உப்பிக் கொண்டு, நல்ல கலராகவும், மொறுமொறுவென்றும் இருக்கும் .
* தினமும் காலை மாலை வயிற்றுப் பகுதியை, நமது கைகளினால் செல்ஃப் மசாஜ் செய்து வந்தால் தொப்பை குறையும் . இடுப்பு உறுதிபடும் . ரத்த ஓட்டம் அதிகமாகி சருமம் மினுமினுக்கும் .
* மாங்காய்த் தொக்கு செய்ய முதலில் முழு மாங்காயையும் குக்கரில் ஒரு விசில் வைத்து வேகவைத்து , தோலுரித்து, மசித்து எப்போதும்போல் எண்ணெயில் வதக்கித் தொக்கு போட்டால் எண்ணெயும் ஆகாது . ருசியும் அல்வா மாதிரி வரும் !
* பருப்பே வேண்டாம் . அரிசியை நல்ல கைபொறுக்கும் சூட்டில் வறுக்கவும் . எண்ணெயில் எல்லாம் தாளித்து உப்பு சேர்த்து, கொதித்ததும் அரிசியைக் களையாமல் போட்டுப் பொங்கல் செய்யவும் . சூப்பர் டேஸ்ட் !
----மங்கையர் மலர் . ஜூலை 2011 .

No comments: