Tuesday, January 31, 2012

மாயத் தோற்றம் !

" ' நாம் எதைச் செய்தாலும் உலகம் நமக்கு எதிராகவே இருக்கிறதே' என்ற எண்னம் சமயங்களில் ஏற்படுகிறதே ? "
" அது ஒரு மாயத் தோற்றம் . உண்மையிலேயே உலகம் முழுவதும் நமக்கு எதிராக இருந்தாலும்கூட, நான் வாழ்ந்துதானே ஆக வேண்டும் . தஸ்லீமா நஸ்ரினின் கவிதை ஒன்று...
' மனித சுபாவம் அப்படி
நீங்கள் உட்கார்ந்தால்
அவர்கள் சொல்வார்கள்
உட்காராதே.
நின்றால் சொல்வார்கள்
உனக்கு என்ன பிரச்னை
நடக்கக் கூடாதா ?
நடந்தால் சொல்வார்கள்
அவமானம்
உட்கார் நீ .
நீங்கள் தாள முடியாமல்
படுத்தால் சொல்வார்கள்
எழுந்து நில்,
நீங்கள்
படுக்கவில்லையானால் சொல்வார்கள்
கொஞ்சம் படுக்கலாமில்லையா ?
விழிப்பதும் தூங்குவதுமாக என் வாழ்வை
நான் வீணாக்கிக்கொண்டிருக்கிறேன்
நான் இக்கணமே இறந்துபோனால்
அவர்கள் சொல்வார்கள்
நீ வாழ வேண்டும் .
நான் வாழ்வதைப் பார்த்தார்களானால்
யாருக்குத் தெரியும்
அவர்கள் சொல்வார்கள்
நீ இருப்பதே அவமானம்
செத்துத் தொலை .
அதீத பயத்துடன்
ரகசியமாக
நான் தொடர்ந்து
வாழ்ந்துகொண்டிருக்கிறேன் ! '
தஸ்லீமாவின் சொந்த வாழ்க்கையை இந்தக் கவிதை பிரதிபலிப்பதாக இருந்தாலும் கவிதையின் உள்ளடக்கம் எல்லோருக்குமானதே ! "
--- மாணிக்கவாசகம் , மதுரை. ஆனந்தவிகடன் . 9 . 2. 2011 .

No comments: