Tuesday, January 24, 2012

தூங்காவிட்டால்...

6 மணிநேரம் தூங்காவிட்டால்...
தினமும் 6 மணிநேரம் தூங்காவிட்டால் ஆபத்து !
இன்றைய வேகமான உலகத்தில் மாரடைப்புதான் பலரின் உயிருக்கு உலை வைக்கும் முக்கிய நோய் . மன அழுத்தம்,
அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவது, ரத்த அழுத்தம் போன்ற பல காரணங்களால் மாரடைப்பு வருவதாக சொல்கின்றனர் . சரியான தூக்கம் இல்லாவிட்டாலும் மாரடைப்பு வரும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது .
தினமும், 6 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குகிறவர்களுக்கு, ரத்தத்தில் லெப்டின் என்ற வேதிபொருளின் அளவு குறைந்துவிடும் . இதனால் சாப்பிடும் அளவு குறைந்து நாளடைவில் உடல் பலவீனமாகி மாரடைப்பு வருகிறது என்று இங்கிலாந்தின் வார்விக் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் .
--- தினமலர் பிப்ரவரி 11 , 2011 .

No comments: