Friday, January 6, 2012

புத்திசாலி குழந்தை வேண்டுமா ?

புத்திசாலி குழந்தை வேண்டுமா ? தாய்ப்பால் நிறைய கொடுங்க !
தாய்ப்பால் கொடுப்பதுதான் குழந்தைகளுக்கு நல்லது என்பதை உணர்த்தும், அருமையான கண்டுபிடிப்பை வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் . அதாவது தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள், 10 வயதிலேயே புத்திசாலி குழந்தைகளாக மாறுகின்றனர் என்பதுதான் அந்த ஆய்வு செய்தி . அதிலும் தாய்ப்பால் குடித்து வளர்ந்த பிள்ளைகளில் பெண்குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள் படிப்பில் படுசுட்டியாக இருக்கிறதாம் . பெண் குழந்தைகளுக்கு, அவர்களுக்கே உரிய ஹார்மோண்கள் சுரப்பதால், அவர்களின் புத்திசாலித்தனம் கொஞ்சம் மந்தமாக உள்ளதாம் . ஆண் குழந்தைகளுக்கு அத்தகைய ஹார்மோன்கள் சுரப்பதில்லை என்பதால், ஆண் குழந்தைகளின் மூளை மிகவும் சிறப்பாக செயல்படுகிறதாம் . இதனால் அவர்கள் படு புத்திசாலித்தனமாக இருப்பதாக அந்த ஆய்வுத்தகவல் தெரிவிக்கிறது . இவ்வளவு தகவலை கொடுத்துள்ள ஆய்வாளர்கள் குழந்தைகளுக்கு எத்தனை மாதம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்ற தகவலையும் சொல்லாமல் விடவில்லை , குறைந்தது 6 மாதமாவது தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும் . ஒரு வருடம் வரை விடாமல் தாய்ப்பால் கொடுத்தால் சிறப்பான பலனை காணலாம் என்று அந்த ஆய்வுத்தகவல் கூறுகிறது .
ஆனால், இன்றைய நாகரிக மங்கைகள் தாய்ப்பால் கொடுத்தால், தனது அழகு குறைந்துவிடும் என்று நினைத்து குழந்தைகளுக்கு புட்டிப்பால் கொடுக்கிறார்கள் . இது தாய், குழந்தை இருவரின் ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிக்கும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர் .
--- தினமலர் . டிசம்பர் 22 , 2010 .

No comments: