Sunday, January 15, 2012

மாரடைப்புக்கு காரணம் .

மாரடைப்புக்கு காரணம் ஒரு வகை சிறுநீரக ஜீன்
மனித வாழ்க்கையை திடீரென்று முடிவுக்கு கொண்டுவந்து சுபம்போடும் கொடிய நோய் எது என்று கேட்டால் ' மாரடைப்பு ' என்று சட்டென சொல்லிவிடலாம் . மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணம் மனிதனின் சிறுநீரக ஜீன்தான் என்ற அதிர்ச்சித் தகவல் இப்போது வெளியாகியுள்ளது .
மனித உடற்கூறின் முக்கிய அம்சம் டி.என்.ஏ. எனப்படும் மரபணு . இதில்தான் மனிதத்தன்மையையும் உடல் செயல்பாடுகளையும் தீர்மானிக்கும் ஜீன்கள் உறைந்துள்ளன . மனிதன் மனிதனாக செயல்படுவதற்கு இலக்கணமானவை இந்த ஜீன்கள்தான் ...
மனித உறுப்புகள் ஒவ்வொன்றின் செயல்பாட்டையும் கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பதும் ஜீன்கள்தான் . எனவே, ஜீன்கள் இல்லையேல் மனிதன் இல்லை என்பது ஏற்கனவே உறுதிசெய்யப்பட்ட உண்மை . இதனால்தான் ஜீன்கள் பற்றிய ஆராய்ச்சி உலக அளவில் நடந்துகொண்டிருக்கின்றன .
மனிதனின் இதயநோய்களுக்கு, மனிதனின் சிறுநீரகத்தில் காணப்படும் ஒருவகை ஜீன்தான் முக்கிய காரணம் என்ற உண்மை தெரியவந்துள்ளது . இந்த சிறுநீரக ஜீனில் புரோட்டின் அமைப்பு சீரற்று இருக்குமாம் . இதற்கு சி.எல்.சி.என்.கே., என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது .
இந்த ஜீனுக்கும் இதயத்தின் செயல்பாட்டுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை . என்றாலும் இதயத்துக்கு செல்லும் ரத்தத்துடன் சிறுநீரக ஜீன் இதயத்தில் செல்லும்போது அதில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், இதயத்தில் ரத்த ஓட்டத்தை தடுத்து நிறுத்துகிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் .
--- தினமலர் . ஜனவரி 20 , 2011 .

No comments: