Sunday, January 22, 2012

கவனிக்க வேண்டிய விஷயம் !

பேச்சிலே கவனிக்க வேண்டிய விஷயம் !
பேச்சிலே கவனிக்க வேண்டிய விஷயம் சமயோசிதம் . நீங்கள் ஒரு கருத்தைச் சொல்கிறீர்கள் . அதற்கு இன்னொருவர் எதிர்க் கருத்து தெரிவிக்கிறார் . அவருக்கு நீங்கள் பதில் சொல்லும்போது அவர் மனம் புண்படாமல் நாசுக்காகக் கருத்தைப் பதிவு செய்ய வேண்டும் . அண்ணா உலகத் தமிழ் மாநாடு நடத்தினார் . அப்போது ஊர்வலத்தில் யாருக்கு எல்லாம் சிலை வைக்கலாம் என்று ஆலோசித்தார்கள் . ஒவ்வொருவரும் தங்கள் எண்ணத்தைச் சொன்னார்கள் . இறுதியாக, தவ்த்திரு குன்றக்குடி அடிகளார் எழுந்து, ' நீங்கள் வள்ளுவன், கம்பன், இளங்கோ ஆகியோருக்கு எல்லாம் சிலை வைக்கிறீர்கள் . அப்பர் ( திருநாவுக்கரசர் ) எனும் சிவனடியாருக்கும் சிலை வையுங்கள் ' என்றார் . அண்ணாவோ நாத்திகர் . இவர் வைக்கச் சொல்வதோ தெய்வத்தின் சிலை . அவர் மனதைப் புண்படுத்தாமல் அண்ணா இப்படிச் சொன்னார், ' அரசு வணங்கத் தக்கவர்களுக்குத்தான் சிலை வைக்கிறதே தவிர, வழிபடத் தக்கவர்களுக்கு அல்ல ! '. என்ன ஒரு நாசுக்கு பாருங்கள் . மேடைப் பேச்சில் இந்த ' ஸ்பான்டேனியஸ் ஸ்பார்க் ' அதாவது, மின்னல் தெறிப்பது போன்ற சமயோசிதம்தான் வெற்றியைக் கொடுக்கும்... மக்களைக் கவரும் ! .
--- ந. வினோத்குமார் , ஆனந்த விகடன் 2 . 2 .2011 .

No comments: