Saturday, January 21, 2012

மனம் கவர்ந்த கவிதை

ஒரு மரம் பாடுவதாக பால்டிமோர் குரோட்டோ என்ற கவிஞர் எழுதிய கவிதை :
.' இந்தக் கானகத்திலிருந்து
எதையாவது எடுத்துச் செல்ல
விரும்பினால்
அதை உங்கள்
கேமரா சுருளுக்குள்
எடுத்துச் செல்லுங்கள் .
இங்கு எதையாவது
விட்டுச் செல்ல வேண்டும் என
ஆதங்கப்பட்டால்
உங்கள் காலடித் தடத்தை மட்டும்
விட்டுச் செல்லுங்கள் .
எதையாவது கழித்தேயாக
வேண்டும் என
விரும்பினால் உங்களது பொன்னான
நேரத்தை இங்கே கழியுங்கள் ! '
--- அ. யாழினி பர்வதம் , சென்னை - 78. ஆனந்த விகடன் 2 . 2 .2011 .

No comments: