Tuesday, March 6, 2012

' சதாபிஷேகம் '

' சதாபிஷேகம் செய்வதை 80 வயது முடிந்து 10 மாதங்கள் மற்றும் 27 நாட்களுக்குப் பிறகு செய்ய வேண்டும் ' என சாந்திரத்னாகரம் எனும் நூலும், ' ஆயிரம் பிறை கண்டவர்களுக்குச் சதாபிஷேகம் செய்ய வேண்டும் ' என சாமிகாகம் எனும் நூலும் கூறுகின்றன .இரண்டையும் ஆராய்ந்து பார்த்தால் ஒன்றாகவே உள்ளது .
அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாம் பிறையைத் தரிசிக்க வேண்டும் . இதனால் ஆயுள் விருத்தியடையும் .
ஒரு ஆண்டில் 13 முறை மூன்றாம் பிறை வரும் . ஆயிரம் முறை என்று கணக்கிட்டுப் பார்த்தால் 77 ஆண்டுகள் இடைவிடாது இந்தப் பிறையைக் காண வேண்டும் .
நமக்கு நினைவு தெரிந்து பிறை தரிசிப்பதற்கு நான்கு வயதாவது ஆக வேண்டும் . கூட்டிப் பார்த்தால், நினைவு தெரிந்து ஆயிரம் பிறை கண்டு முடிப்பதற்கு மேற்சொன்ன 80 வயது 10 மாதங்கள் 27 நாட்கள் முடிய வேண்டும் என்ற கணக்கு சரியாக வருகிறது .
' சதாபிஷேகத்தை ஜன்ம நட்சத்திரத்தில்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை . நல்ல முகூர்த்த நாள் பார்த்து செய்ய வேண்டும் ' எனவும் ஆகமங்கள் கூறுகின்றன .
--- தினமலர் இணைப்பு .பிப்ரவரி 3, 2011 .

No comments: