Tuesday, March 20, 2012

தெரியுமா ? தெரியுமே !


* நாம் எப்படி தானாக மூச்சு விடுகிறோமோ அதுபோல்தான் கண் இமைக்கிறது . பொதுவாக எல்லாருக்கும் ஆறு வினாடிக்கு ஏழு முறை என்ற விகிதத்தில் கண் இமைத்தல் செயல் நடைபெறும் .
* சராசரியாக ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 2,50,000 கொட்டாவிகள் விடுவதாகக் கண்டுபிடித்த்து இருக்கிறார்கள் . தாயின் வயிற்றில் கரு உருவான 70 -வது நாளில் இருந்து கொட்டாவி விட ஆரம்பிக்கிறோம் .
* இறந்தவர்களின் உடலோடு உறவுகொள்வதற்கு ' நெக்ரோஃபிலியா ' என்று பெயர் . மனோதத்துவ நிபுணர்கள் இதை நர மாமிசம் தின்பதைவிட ( Cannibalism ) மோசமான நிலையாகக் கருதுகிறார்கள்
* டிகிரிக்கு ஒன்று வீதம் 360 திசைகள் உள்ளன . டிகிரிக்குள் புகுந்து பார்த்தால், இன்னும் பல்லாயிரக்கணக்கில் இருக்கும் !
* ட்ராய் என்றால், டெலிகாம் ரெகுலேட்டரி அத்தாரிடி ஆஃப் இந்தியா என்று பொருள் .
* இந்தியாவின் தேசிய விளையாட்டு., ஹாக்கி .
* சந்தன கடத்தல் வீரப்பன் மகள்களின் பெயர்கள் : வித்யாராணி, பிரபா விஜயலட்சுமி .
* ஒரு கருவுக்கு உள்ளே இன்னொரு கரு வளராது . ஆனால், ஒரு வகை ஈ இருக்கிறது . அதில் ஆண் வர்க்கமே கிடையாது .பிறப்பது பெண் ஈதான் . பிறக்கும்போதே அதன் வயிற்றுக்குள் பெண் கரு இருக்கும் . அதாவது உடலுறவே இல்லாமல் அம்மா, மகள், பேத்தி... இப்படி !
* ' சாட்டிஸ்ட் ' என்றால் -- பிறருக்குத் துன்பத்தைத் தந்து அதில் மகிழ்கிறவர்கள் . அதற்கென்று வார்த்தைகூட எந்த மொழியிலும் இல்லை . ஜெர்மன் மொழியில் மட்டுமே அதற்கென்று வார்த்தை உண்டு -- ஷாடன்ஃப்ராய்டு ( Schadenfreude ) .
* முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேய இன்ஜினீயர் -- பென்னி குய்க் .
* ஆதார் அட்டை என்றால் -- மத்திய அரசால் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் வழங்கப்படும் அடையாள அட்டை என்று பொருள் .

No comments: