Sunday, December 13, 2015

செல்போன்

  செல்போன் செயல்பட மூலகாரணமாக இருக்கும் பேட்டரியின் சார்ஜ் தாக்குபிடிக்க சில ஆலோசனைகள் :
*   புது பேட்டரியை ஆப் செய்த நிலையில் 8 மணிநேர சார்ஜ் போடவேண்டியது அவசியம்.  பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால்
    போன்றது இது.
*  பேட்டரியின் சார்ஜ் அளவு பாதிக்கும் கீழ் குறைந்த பிறகு சார்ஜ் செய்வது அதன் ஆயுளைஅதிகரிக்கும்.  அதற்காக லோ
    பேட்டரி காட்டும் அளவுக்கு காயப்போடவும் கூடாது.  நீண்ட நேரம் சார்ஜ் செய்வது தவறு.  3 முதல் 4 மணி நேரமே போதும்.
*   புளூடூத் சேவையை உபயோகப்படுத்தி முடிந்ததும் அணைத்துவிட வேண்டும்.  இது கதிர்வீச்சு முறையில் அருகில் உள்ள
    செல்போன்களை தொடர்பு கொள்ளும் வசதி என்பதால், அதிக சக்தியை உபயோகப்படுத்தும்.  புளூடூத் வழியாக வைரஸ்களும்
    பரவ வாய்ப்பிருப்பதால், தேவையில்லாதபோது அணைத்து வைப்பது பேட்டரிக்கு மட்டுமல்லாமல், செல்போனுக்கும் நல்லது.
*   காரணமில்லாமல் வைப்ரேஷன் மோட் எனும் அதிர்வில் வைத்திருப்பது, சார்ஜ் அதிகமாக குடிக்கும்.  அதே போல் கீ பேட்
    டோன், ஸ்டாட் அப் டோன் போன்றவையும் அவசியமானவை அல்ல.  தேவைப்படின் ஒலி அளவை குறைத்து பயன்படுதலாம்.
*   செல்போனை அழகாக காட்டுகிறது என்பதற்காக ஸ்கிரீன் சேவர், மூவிங் வால் பேப்பர் போன்ற சேவைகளை
    பயன்படுத்துவது பேட்டரியின் சார்ஜை குறைக்கும்.  அதேபோல டவர் இல்லாத இடங்களில் அணைத்து வைப்பது நல்லது.
*   அடிக்கடி உபயோகப்படுத்தும் ஆபரேஷன்களை மட்டும் ஆக்டிவில் வைத்துக்கொள்ளலாம்.  எப்போதாவது உபயோகிக்கும்
    ஆபரேஷங்கள். தேவையில்லாத ஆபரேஷன்களையும் ஆப் செய்து வைப்பது பேட்டரி ஆயுளை நீடிக்கும்.
*   ஓடியாடி விளையாடுவது எப்படி உடலில் உள்ள கலோரிகளை எரிக்குமோ, அதே போல செல்போனில் கேம்ஸ்
     விளையாடுவதும் அதன் சக்தியை அதிக அளவில் செலவழிக்கும்.  எனவே பேட்டரி நலன் கருதுபவர்கள்  அளவாகவே
     விளையாடுங்கள்.
--   சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். 2-3-2014. 

No comments: