Friday, December 18, 2015

எத்தனை சிரிப்பு...


தனக்குள் சிரிப்பவன் ஞானி.
தனக்குத்தானே சிரிப்பவன் பைத்தியம்.
தன்னை மறந்து சிரிப்பவன் ரசிகன்.
தன்னை நினைத்துச் சிரிப்பவன் காதலன்.
பிறரைப் பார்த்துச் சிரிப்பவன் கர்வி.
பிறருக்காகச் சிரிப்பவன் கயவன்.
பிறர் நோகச் சிரிப்பவன் கொடியவன்.
பிறர் காணச் சிரிப்பவன் கோமாளி.
சிரித்துக் கொண்டே வெற்றி பெறுபவன் மதியூகி.
வெற்றி பெற்றாலும் சிரிக்காதவன் கர்மயோகி.
--  சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை.
-- தினமலர். பெண்கள்மலர். 8-3-2014.                                    

No comments: