Wednesday, December 30, 2015

சுரங்க ரயில் நிலையம்

 ( சிறப்பு )
ஆசியாவின்  மிகப்பெரிய  சுரங்க ரயில் நிலையம்  இன்று  திறப்பு
   ஆசியாவின்  மிகப்பெரிய  சுரங்க ரயில் நிலையம்  சீனாவின்  செஞ்சென்  நகரில்  கட்டப்பட்டுள்ளது.  இந்த  ரயில்  நிலையம்  இன்று  திறக்கப்படுகிறது.
   இதன்  மொத்த  பரப்பளவு  1,47,000  சதுர  அடியாகும். இது  21  கால்பந்து  மைதானங்களுக்கு  சமானதாகும்.  பூமிக்கடியில்  3  அடுக்குகள்  அமைக்கப்பட்டுள்ளன.     இங்கு  ஒரே  நேரத்தில்  3  ஆயிரம்  பயணிகள்  வரை  ரயிலுக்காக  காத்திருக்க  முடியும்.  இந்த  ரயில்  நிலையம்  வழியாக  முதல்  கட்டமாக  11  அதிவேக  ரயில்கள்  இயக்கப்பட  உள்ளன.  இந்நகரில்  இருந்து  15  நிமிடங்களில்  ஹங்காங்  செல்லமுடியும்.
-- ஐஏஎன்எஸ்.  தேசம்.
-- 'தி இந்து' நாளிதழ். புதன், டிசம்பர் 30, 2015.   

No comments: