Wednesday, December 2, 2015

யானை

*  யானைகளில் இரண்டு வகைகள் உள்ளன.  ஆசிய யானை, ஆப்பிரிக்க யானை.
*  ஆப்பிரிக்க யானைகளில் பெண், ஆண் இரண்டுக்கும் தந்தங்கள் உண்டு.  ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே
   தந்தங்கள் உண்டு.  உணவைத் தோண்டித் தின்பதற்குத் தந்தங்கள் உதவுகின்றன.
* பெண் யானைகளுக்கு 12 வயதாகும்போது, குட்டிகளை ஈனத் தொடங்குகின்றன.  யானைகளின் கர்ப்பகாலம் 22 மாதங்கள்.
*  யானைகளால் தந்தங்களைப் பயன்படுத்தி, நிலத்தடி நீரையும் தோண்டிப் பருக முடியும்.
*  யானைகளுக்குப் பெரிய, மெல்லிய காதுகள், யானையின் காதுகளில் அமைந்துள்ள ரத்தத் தமனிகள்தான் அவற்றின் உடல்
   வெப்பநிலையைச் சீராக வைக்கின்றன.  உஷ்ணமான தட்பவெப்பநிலையில் காதுகள் வழியாகப் பயணிக்கும் ரத்தம் அதன்
   உடலைக் குளிர்விக்கிறது.
* பொதுவாக யானைகளை எந்தப் பிராணியும் உணவாகக் கொள்வதில்லை.  இருப்பினும் ஆப்பிரிக்க சிங்கங்கள், குட்டி
   யானைகள் மற்றும் பலவீனமான நிலையில் உள்ள யானைகளை வேட்டையாடித் தின்னும்.  யானைகளுக்குப் பெரிய
   அச்சுறுத்தலாக இருப்பவர்கள் மனிதர்களே.
*  யானைகளின் தும்பிக்கையால் ஒரு பொருளின் அளவு, வடிவம், வெப்பநிலையை உணர முடியும்.  உணவைத் தூக்கவும்,
   தண்ணீரை எடுத்து வாயில் ஊற்றவும் தும்பிக்கை பயன்படுகிறது.
*  யானையின் தும்பிக்கை 2 மீட்டர் அளவு வளரக்கூடியது.  தும்பிக்கையின் கனம் 140 கிலோகிராம்.  ஒரு லட்சம் தசை
   நாண்களால் உருவாக்கப்பட்டது அது.  ஆனால், தும்பிக்கையில் எலும்புகள் இல்லை.
*  பெண் யானைகள் சேர்ந்து வாழக்கூடியவை.  ஆண் யானைகள் 13 வயதில் தங்கள் மந்தையை விட்டுப் பிரிந்து செல்கின்றன.
   அந்த வயதிலிருந்து ஒரு ஆண் யானை தனியாகவே வாழத் தொடங்குகிறது.
*  யானைகள் தாவர உண்ணிகள்.  இலைகள், கிளைகள், மூங்கில்கள் மற்றும் வேர்ப்பகுதிகளை உணவாக கொள்கின்றன.
-- ஷங்கர்.  உயிரினங்கள் யானை.  மாயாபஜார்.
-- 'தி இந்து' நாளிதழ். புதன், பிப்ரவரி 26,2014.  

No comments: