Sunday, February 21, 2016

தாய்மொழி வெறி வேண்டாம்.

   சிலேடையை மொழி பெயர்க்க முடியாது.  அதுதான் அதன் சிறப்பும் அதில் உள்ள குறையும்.  ஹிந்தியில் கயா என்ற சொல்லுக்கு 3 பொருள் உண்டு.  அதனை தமிழில் எப்படி மொழி பெயர்க்க இயலும்.  ஹிந்தி ஒழிக என்பது தவறு.  ஹிந்தி ஆதிக்கம் ஒழிக என்பது தான் சரி.  இத்தகைய போக்கை மாற்றிக்கொள்ளவேண்டும்.  மொழி வெறுப்புக்கூடாது.  தாய்மொழி வெறி வேண்டாம் பற்று இருந்தால் போதும்.
     பிள்ளைபெருமாள் ஐயங்கார் திருவேங்கடம்  அந்தாதி என்ற நூல் எழுதினார்.  அனைவரும் சிலேடைக்கு இரு பொருள் கொண்ட நிலையில், அவர் நான்கு பொருள் அளித்தார்.  சிலேடையில் கி.வா.ஜ சிறந்து விளங்கினார்.  சாவி, சோ, உள்ளிட்ட பலர் கேள்வி பதில்கள் மூலமும் சிலேடையை வளர்த்தனர்.  சொல்லிப் புரியவைப்பது ஒரு வகை, சொல்லாமலே புரியவைப்பது மற்றொரு வகை.
-- ஊர்வலம் .
--  'தி இந்து' நாளிதழ்.  திங்கள், ஜனவரி 20, 2014.       

No comments: