Thursday, February 4, 2016

உங்களுக்குத் தெரியுமா?

   சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுப்பதற்கான முதல் வேலை, அது பற்றி முறையாக அறிந்துகொள்வதுதான்.  நமது சுற்றுச்சூழல் பற்றி ஆக்கபூர்வமான, எதிர்மறையான சில விஷயங்களைப் பார்ப்போம்.
*   ஒரு விநாடி மின்சாரம் இல்லாவிட்டால்கூடத் தவித்துப் போய் விடுகிறோம்.  ஆனால், நாம் பயன்படுத்தும் ஒரு யூனிட்
    மின்சாரத்தை உருவாக்க 300 கிராம் நிலக்கரியும், 3 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறத்து.
*  வீட்டில் குடிப்பதற்கும் சமைக்கவும் நாம் பயன்படுத்தும் தண்ணீர், நமது மொத்தத் தண்ணீர் செலவில் வெறும் 10% மட்டுமே.
    பெரும்பாலான தண்ணீர் குளிக்க, தூய்மைப்படுத்த, கழுவ எனப் பெருமளவு வீணாகிறது.  ஒரு வெஸ்டர்ன் டாய்லெட் ஒரு
    முறைக்கு 8 முதல் 10 லிட்டர் தண்ணீரை வீனடிக்கிறது.
*   வீட்டுக்குள்ளும் அலுவலகத்திலும் வளர்க்கப்படும் தாவரங்கள் மதிப்புமிக்கவை என்கின்றன ஆராய்ச்சிகள்.  அவை
    கட்டடங்களுக்கும், மனிதர்களுக்கும் பல்வேறு வகைகளில் நன்மை தருகின்றன.  எப்படியென்றால், நமக்குத் தேவையான
    ஆக்சிஜனை அதிகரிக்கின்றன.  நமக்குத் தேவையில்லாத கார்பன் டை ஆக்சைடைக் குறைக்கின்றன.  ஈரப்பதத்தை
    அதிகரிக்கின்றன, காற்று ஆசுபாட்டைக் குறைக்கின்றன.  வெப்பநிலையைக் குறைக்கின்றன.  மன அழுத்தத்தையும்
    குறைக்கின்றனவாம்.
-- தொகுப்பு : ஆதி.    நன்றி: ஹேபிடட் அப்பல்லோ வழிகட்டி.  உயிர் மூச்சு.
-- 'தி இந்து' நாளிதழ். செவ்வாய், பிப்ரவரி 25,2014. 

No comments: