Thursday, January 21, 2010

தூக்கணாங்குருவி 1

ஆண் குருவி கூடு கட்டும் . பெண் குருவி சோதித்துப் பார்க்கும் . அந்தக் கூடு சரியில்லையென்றால் பெண் குருவி அந்தக் கூட்டில் வாழாது . கூட்டையும் நிராகரித்துவிட்டு தன் இணை ஆண் குருவியையும் பெண் குருவி நிராகரித்துவிடுகிறது . பெண் உரிமையை சொல்லாமல் சொல்கின்றன . தூக்கணாங்குருவிகளின் வாழ்வியல் சரித்திரம் .
--- இரா . கார்த்திகேயன் , குமுதம் , 30 - 09 - 2009 .
உங்களுக்குத் தெரியுமா ?
உலகில் முதன்முதல் தோன்றிய பத்திரிகை எது ?
' இட்ச்சிங் பங் ' என்ற சீன தினசரியே உலகில் முதன்முதல் வெளியான பத்திரிகை . அது கி. பி . 910 - முதல் பெய்யிங் நகரிலிருந்து வெளிவருகிறது . இதன் ஆசிரியர்களில் 800 பேருக்கு மேல் தங்கள் உயிரை ' அச்சுச் சட்ட ' த்தினால் இழந்திருக்கிறார்களாம் .
வக்கீல்கள் ஏன் கறுப்பு கவுன் அணிகிறார்கள் ?
கி. பி . 1714 - ல் இங்கிலாந்து தேச ராணியான ஆன் இறந்ததும் , சீமை வக்கீல்கள் வெகுநாள் வரை கறுப்புச் சட்டை அணிந்து துக்கம் கொண்டாடினார்களாம் . அந்தக் கறுப்பு சட்டை கடைசியில் அவர்கள் தொழிலின் சின்னமாகிவிட்டது .
--- காலப்பெட்டகம் . 1935 . ஆனந்தவிகடன் .

No comments: