Saturday, January 23, 2010

நவராத்திரி விரதம் .

நவராத்திரி விரதம் இரண்டு வகையாக பின்பற்றப்படுவதுண்டு . பகலும் இரவும் விரதமிருந்து தேவியை வழிபடுவது நவராத்தர விரதம் எனப்படும் . விரதமிருந்து இரவில் மட்டும் வழிபடுவது நவராத்திரி விரதம் எனப்படும் .
நவராத்திரி விரதம் , பூஜை , பாராயணம் முதலானவற்றை ஒன்பது நாட்கள் தொடர்ந்து செய்யவேண்டும் என்று விரத கல்க நூல்கள் சொல்லியிருக்கின்றன . முதல் மூன்று நாட்கள் துர்கா பூஜை , அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி பூஜை , இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி பூஜை என முப்பெரும் தேவியரை வழிபடுவார்கள் .
--- தினமலர் , பக்தி மலர் . செப்டம்பர் 24 , 2009 .

No comments: