Thursday, January 28, 2010

விதிவிலக்கு !

இறைவனுக்கு அர்ச்சிக்கப்படும் சில வகை பொருட்களுக்கு குறிப்பிட்ட காலம் வரை விதிவிலக்கு உண்டு . வில்வ இலையை பறித்து 6 மாதங்கள் வரையிலும் , வெண்துளசியை பறித்து ஓராண்டு வரையிலும் , தாமரையை பறித்து 7 நாள் வரையிலும் , அரளியை பறித்து 3 நாட்கள் வரையிலும் வைத்திருந்து பூஜைக்கு பயன்படுத்தலாம் .
துளசியை பறிக்க .
துளசி பறிக்கக் கூட சில விதிமுறைகள் உள்ளது . திருவோண நட்சத்திரம் , சப்தமி , அஷ்டமி , துவாதசி , சதுர்தசி , அமாவாசை , பவுர்ணமி , மாதப்பிறப்பு , மாலை வேளை , இரவு நேரம் , ஞாயிறு , திங்கள் , செவ்வாய் , வெள்ளி போன்ற நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பூஜைக்காக துளசி பறிக்கலாம் .
அர்ச்சனை .
இறைவனுக்கு அர்ச்சனை செய்ய பூக்களையும் , இலைகளையும் பறிக்கும் போது பேசிக் கொண்டோ , சிரித்துக் கொண்டோ பறிக்கக் கூடாது . அதுபோல கைகளை கீழே தொங்கவிட்ட வாக்கிலும் பறிக்கக் கூடாது . அத்துடன் கையால் உடம்பையும் , உடைகளையும் தொட்டவாறும் , கொம்புள்ள கிளைகளை முறித்தலும் கூடாது . நம் மனதில் இறைவனை முழுவதுமாக நிறுத்தி , அவன் நாமத்தை உச்சரித்தவாறே பறிக்க வேண்டும் .
--- தினமலர் , பக்திமலர் . ஆகஸ்ட் 27 . 2009 .

No comments: