Saturday, January 2, 2010

அசத்தல் ஐடியா .

* வெள்ளைப்பூண்டு சில நேரங்களில் அவசரமாக தேவைப்படும் . அச்சமயங்களில் பூண்டை உரித்து உபயோகப்படுத்த நேரம் பிடிக்கும் . இதற்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட அலவு பூண்டை வாங்கி தோலுரித்து நல்லெண்ணையில் போட்டு வைத்து விடலாம் . பூண்டு தேவைப்படும் சமயத்தில் ஒரு ஸ்பூன் அளவு அந்த எண்ணையை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் . வெள்ளைப்பூண்டு போட வேண்டிய அவசியம் இல்லை .
* ரேஷன் கடைகளில் வாங்கும் அரிசி கலர் மங்கி போயிருந்தால் , சிலர் ரேஷன் அரிசியை பாலிஷ் செய்வது உண்டு . அப்படி செய்த பின்னும் அரிசி வெள்ளை வெளேர் என்று மாறவில்லையென்றால் , கவலைப்பட வேண்டாம் . அதாவது ... அரிசியை அடுப்பில் வைத்தவுடன் இரண்டு சொட்டு எலுமிச்சை பழச் சாற்றை ஊற்றுங்கள் . பின்பு சொறு வெள்ளை வெளேர் என்று காட்சியளிக்கும் . குழைந்தும் போகாது .
* முட்டைகோஸ் பொரியல் நல்ல நறுமணத்துடன் இருக்கும் . ஆனால் , முட்டைகோஸ் சமைத்த ஓரிரு மணி நேரத்தில் அந்த நறுமணம் குறைந்து விடும் . அப்படி நறுமணம் குறையாமல் இருக்க , பொரியல் செய்யும்பொழுது சிறிதளவு இஞ்சி சேர்த்துச் கொள்ள வேண்டும் . நறுமணம் குறையவே குறையாது .
--- பாக்யா இதழ் . ஜூம் 26 - ஜூலை 2 ; 2009 .

No comments: