Friday, January 22, 2010

அதா சங்கதி ?

* காந்திஜிக்கு 15 வயதிலிருந்து 35 வயதுக்குள் 5 மகன்கள் பிறந்தனர் . அதில் முதல் குழந்தை , பிறந்த மூன்று நாட்களிலேயே இறந்து போனது .
* மேலாடையைத் துறந்தபின் மகாத்மா காந்தி முதன் முதலாக உரையாற்றிய இடம் மதுரையில் தற்போது ' காந்தி பொட்டல் ' என்று அழைக்கப்பட்ட இடம்தான்22
* இளவரசர் ஜார்ஜ் இங்கிலாந்து மன்னராக முடிசூட்டிக்கொண்ட நாளை சென்னையிலும் கொண்டாடினார்கள் . எப்படித் தெரியுமா ? தி . நகர் தெருவெங்கும் தூங்குமூஞ்சி மரங்கள் நடப்பட்டன . அன்றுதான் 555 சிகரெட் சென்னைக்கு அறிமுகமானது ..
* DOWRY என்னும் சொல்லை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர் ஷேக்ஸ்பியர் . அவர் தனது நாடகமான கிங்கியரில் உபயோகித்துள்ளார் DOWRY என்னும் சொல்லை .
* அலகாபாத்தில் உள்ள அக்பர் கோட்டையில் ஒரு ஆலமரம் உள்ளது . அம்மரம் அக்பர் காலத்திலிருந்தே இருப்பதாக சமீபதில் கண்டுபிடித்துள்ளனர் .
* மலையே இறைவன் என்பது திருவண்ணாமலையில் மட்டுமே . அண்ணாமலையின் வயது 260 கோடி ஆண்டுகள் . மலையின் உயரம் 2748 அடிகளாகும் . ஆழம் 200 கி. மீ .
* நோபல் பரிசு பெற்ற தாகூருக்கு கல்கத்தாவில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற வி. ஐ. பி. கள் வாசலில் இருந்த வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டனர் . அதில் ஒரே ஒருத்தர் மட்டும் தமிழில் கையொப்பமிடிருந்தார் . அவர்தான் தமிழக விஞ்ஞானி சர். சி . பி . ராமன் .
* சிகரெட்டில் அமோனியா , ஆர்செனிக் , கரியமில வாயு , கார்பன் மோனாக்சைட் , நிகோடின் , பார்வோ லின் , பென்ஸோபைரிடின் , ப்ரஸ்சிக் , பெண்டிலுன் , லூட்டிசைன் போன்ற 10 வகையான நஞ்சுகள் உள்ளனவாம் .
* காக்காய் வலிப்பு நோயைக் குணப்படுத்த நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்து , சாரைப்பாம்பின் விஷத்திலிருந்து தயாரிக்கப்படுகிறதாம் .
* கவிஞர் ரவீந்திநாத் தாகூரும் , மோதிலால் நேருவும் ஒரே ஆண்டில் , ஒரே மாதத்தில் , ஒரே நாளில் பிறந்தவர்கள் .
* சுவாமி ராமதீர்த்தர் தீபாவளியன்று பிறந்தார் . ஒரு தீபாவளியன்று சன்னியாசம் பெற்றார் . தீபாவளி தினத்தன்று முக்தியடைந்தார் .
* தீபாவளியன்றுதான் ஆதிசங்கரர் ' ஞானபீடம் ' என்ற அமைப்பையும் , சீக்கிய குரு கோவிந்தசிங் ' கால்சா ' என்ர அமைப்பையும் தொடங்கினர் .
* விரைவில் ரிசர்வ் வங்கி 10 ரூபாயை பிளாஸ்டிக் நோட்டுகளாக வெளியிடுகிறது . ஆனால் , முத்ன் முதலாக பிளாஸ்டிக் நோட்டு வெளியிட்ட நாடு , ஆஸ்திரேலியாதான் . 1988 -ல் பத்து டாலர்
பிளாஸ்டிக் நோட்டுகளை , ஆஸ்திரேலியாவை கண்டுபிடித்த கேப்டன் குக் கப்பலில் வரும் படத்தோடு வெளியிட்டது .
* மனிதனின் கைகள் 27 சின்னஞ்சிறு எலும்புகளால் உருவானவை . அதனால்தான் எல்லா பக்கமும் திருப்பியும் அசைத்தும் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது .
--- பாக்யா , அக்டோபர் 2 -- 8 ; 2009 .-- 9 - 15 , 2009 .- 23 - 29 ; 2009 .-- நவம்பர் 13 - 19 ; 2009 .

2 comments:

sathishsangkavi.blogspot.com said...

காந்தியைப்பற்றி அறியாத் தகவல்கள்...

க. சந்தானம் said...

அன்புள்ள சங்கவி அவர்களுக்கு , காந்தியைப் பற்றி அறியாத தகவல்கள் என்று தெரியப்படுத்தியுள்ளீகள் அதற்காக நன்றி !