Sunday, January 10, 2010

கங்கண சூரியகிரகணம் !

108 வருடங்களுக்கு பிறகு , ஜனவரி 15 -ந்தேதி 2010ல் வருகிறது .
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது சந்திரன் மறைக்கப்படுகிறது . இதுவே சந்திர கிரகணம். அது போல சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வருவது சூரியன் மறைக்கப்படுகிறது . இதுவே சூரியகிரகணம் . உலகில் வருடத்திற்கு 3 முறை சந்திர கிரகணமும் , 2 முதல் 5 வரை சூரிய கிரகணமும் ஏற்படுகிறது .
சூரியனை சந்திரன் நேருக்கு நேர் மறைக்கும்போது அதிகபட்சமாக சூரியனை மறைத்தாலும் சூரியன் ஒரு வளையம் போல தெரியும் . இதுவே கங்கண சூரிய கிரகணம் . அதுவும் உலகில் இது எல்லா இடத்திலும் கங்கண சூரிய கிரகணமாக தெரியாது . கங்கண சூரிய கிரகணம் ஒரு இடத்தில் தெரிந்தால் மீண்டும் அதே இடத்தில் தெரிய 108 ஆண்டுகள் ஆகும் . அதுபோல 108 ஆண்டுகளுக்கு பிறகு கங்கண சூரிய கிரகணம் தமிழ் நாட்டிற்கு ஜனவரி மாதம் 15 -ம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தெரியும் .
இந்த சூரிய கிரகணத்தை தமிழ் நாட்டின் தென் மாவட்டங்க்களிலும் , கேரளாவின் தெற்கு பகுதிகளிலும் நன்றாக தெரியும் .
இதற்கு முந்தைய கங்கண சூரிய கிரகனம் தமிழ் நாட்டில் 1901 - ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்டுள்ளது . இனி அடுத்த கங்கண சூரிய கிரகணம் 20019 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வர உள்ளது .கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது .
--- தினத்தந்தி ,தினமலர் -- 18 . 12 . 2009 .

No comments: