Monday, May 10, 2010

மாறாத காது !

செக்யூரிட்டி சம்பந்தமாக அடையாள அட்டை , கைரேகை , கண்ணில் உள்ள ரத்தக் குழாய்கள் போன்ற பல விஷயங்களை ஆதாரமாக உலகெங்கும் பயன்படுத்தி வருகிறார்கள் . இப்போது காதுதான் பெஸ்ட் என்பது விஞ்ஞானிகளின் கருத்து . மனித காதின் வடிவம் மாறுவதில்லை . அதற்கென்று பிரத்யேகமான டிஸைன் உண்டு . உடலின் எல்லா பாகங்களும் வளர்ச்சியடைந்து மாறும்போது , காது மட்டும் ' ஷேப் ' ,மாறாமல் ' மகா ஸ்லோமோஷனி 'ல் வளர்கிறது . ஆகவே , விரைவில் கதவுதிறக்க வேண்டுமென்றால் ' சென்ஸார் ' முன் காது கொடுத்து ' கேட்க ' வேண்டியிருக்கும் ! ஆனால் , தாதாக்கள் சம்பந்தப்பட்டவர் காதை அறுத்துக்கொண்டு வந்து பயன்படுத்தினால் என்ன செய்வார்கள் என்று புரியவில்லை
---- அமிதா . டிசம்பர் 1 -- 15 , 2009 . சூரிய கதிர்

2 comments:

சந்தனமுல்லை said...

வினோதம்! :-)

க. சந்தானம் said...

அன்பு சந்தனமுல்லை அவர்களுக்கு, வினோதம் என்றீர்கள் . நன்றி !