Saturday, November 13, 2010

வலை பாயுதே !

kanapraba @ twitter .com :
* இரண்டு செய்திகள் . செய்தி ஒன்று : ' நான் விஜயா மருத்துவமனையில் இருந்தபோது, எஸ். பி.பி, கங்கை அமரன் தவிர யாரும் வரவில்லை ' -- மலேசியா வாசுதேவன் . செய்தி இரண்டு : கடும் சுகவீனத்திற்கு மத்தியிலும் ' கலைஞர் 87 ' நூல் வெளியீட்டில் கலந்துகொண்டு சிறப்பித்தார் பாரதிராஜா !
RamaSubramaanian @ twitter .com:
* அடங்க மறு... அத்துமீறு... பின்பு, தி.மு.க -- வுடன் கூட்டணி சேரு -- திருமா !
sanaKannan @ teitter .com :
* இனிமேல் கலைஞர் எந்தக் கட்டடத்தைத் திறந்து வைத்தாலும், அதனை மூன்று மாதங்களுக்குப் பிறகே சென்று பார்க்க வேண்டும் !
---- ஆனந்த விகடன் , 29 .9 . 10 .
Kaattuvaasi @ twitter . com :
* சண்டைபோட்டுக்கொண்டே வருபவர்களை, சமாதானமாக அனுப்புவதும் ..... சமாதானமாக வரும் நண்பர்களை, சண்டை போடச் செய்வதும்... டாஸ்மார்க்கின் திருவிளையாட்டு !
Ilango Krishnan @ facebook . com :
* சாந்தி நிகேதனில் ஒரு சிறுமி, காந்தியிடம் ஆட்டோகிராஃப் கேட்க, ' நீ கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற உயிரைக் கொடுக்கவும் தயங்காதே . அது தவறான வாக்குறுதி
என்றாலும் ! ' என்று எழுதிக் கையெழுத்து இட்டாராம் . தாகூர் அந்தத் தாளின் பின்புறம், ' நீ கொடுத்த வாக்குறுதி தவறு எனில் திரும்பப் பெறத் தயங்காதே ' என்று எழுதிக்
கையெழுத்து இட்டாராம் . நான் என் நண்பனிடம் சொன்னேன், ' நண்பா ! காந்தி ஒரு நல்ல கவிஞர் ... தாகூர் ஒரு நல்ல அரசியல்வாதி ! '
Chennaitalks @ twitter. com :
* சமீபத்திய அதிர்ச்சி : வேலூர் பொற்கோவில் குளத்தில் நூற்றுக்கணக்கான கிரெடிட், டெபிட் கார்டுகள், டிரைவிங் லைசென்ஸ் அட்டைகளைப் பார்த்தது !
swamiomkar @ twitter. com :
* கோழி கஷ்டப்பட்டு முட்டை இடுகிறது . அரசியல்வாதிகள் நாங்கள் முட்டை போட்டோம் என அறிக்கை விடுகிறார்கள் # யாரை நம்ப !
--- ஆனந்த விகடன் , 6 .10 . 10 .

No comments: