Tuesday, November 16, 2010

சாணம் .

சாணம் -- வரப்பிரசாதம். சென்ற நூற்றாண்டுகளில் இல்லங்களைத் தூய்மை செய்யப் பயன்படுத்தப்பட்ட இணையில்லாத கிருமி நாசினி. சாணத்தால் மெழுகப்பட்ட இடத்தில் வைரஸ் தொந்தரவு வரவே வராது. எனவேதான் வீடுகளின் தெருவாசல் மற்றும் பின்வாசலில் சாணி தெளித்து வந்தார்கள்.
' சாணி ' தெளிக்க, சாணம் சேகரிப்பது எப்படி ? என்ற சந்தேகத்துக்கு சாஸ்திரங்களில் விடை இருக்கிறது. பசு சாணம் போடும்போது அது பூமியில் விழுவதற்கு முன்பாக அரசிலை அல்லது ஏதாவது ஒரு இலையில் பிடிக்க வேண்டும். அதனைக் கரைத்துத் தெளிக்க வேண்டும்.
பூமியில் விழுந்த சாணத்தைச் சேகரிக்க நேரும் பட்சத்தில் சாணத்தின் மேற்புறம் கீழ்புறம் மற்றும் புறப்பகுதிகளில் உள்ள சாணத்தை நீக்கி மத்தியில் உள்ள சாணத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது விதி.
--- தினமலர், ஏப்ரல் 11 , 2010.

No comments: