Wednesday, December 7, 2011

இருட்டிலும் பார்க்க முடியும் !

நமது கருவிழியில் ' ப்யூபில் ' என்ற சிறு துவாரம் உள்ளது . வெளிப்புற வெளிச்சத்துக்கு ஏற்றபடி இந்த துவாரம் பெரிதாகவோ, சிறியதாகவோ மாறும் . அதிக வெளிச்சம் இருந்தால், இந்த துவாரம் மிகமிகச் சிறிய அளவில் சுருங்கிவிடும் . இதனால்தான், அதிக வெளிச்சத்தில் நமக்கு கண் 'கூசும் '.
மங்கல் ஒளி, இருட்டு போன்ற குறைவான வெளிச்சத்தின் போது, இந்த துவாரம் பெரிதாக விரியும் . சாதாரண வேளையில் ப்யூபில் துவாரம் இருக்கும் அளவைவிட, இருட்டு வேளையில் அதன் அளவு 16 மடங்கு பெரிதாக மாறும் . இப்படி விரிவடைந்த துவாரத்தின் வழியாக சில காட்சிகள் கண்ணுக்குள் நுழையும் . இதனால்தான் இருட்டிலும் நம்மால் கொஞ்சம் பார்க்க முடிகிறது .
இருட்டிலும் அதிக வெளிச்சத்திலும் கண்விழித்துப் பார்ப்பது பார்வையைப் பாதிக்கும் . எனவே இந்த இரண்டையும் தவிர்க்க வேண்டும் .
--- தினமலர் . நவம்பர் 12 , 2010 .

No comments: