Tuesday, December 20, 2011

ஆணா, பெண்ணா ?

செத்துப் போனவரோட மண்டை ஓட்டைப் பார்த்தே அவர் ஆணா, பெண்ணானு கண்டுபிடிக்க முடியும் !
ஆண்களின் கண் குழிவு முழுமையா, வட்டமா இருக்கும் . பெண்களோட கண் குழிவு முழு வட்டமா இருக்காது . தவிர, பெண்களோட மண்டை ஓடு சின்னதாக இருக்கும் . அதேசமயம், அவங்களோட இடுப்பு எலும்பு பகுதி பெரிசா இருக்கும் . இதையெல்லாம் கணக்கெடுத்தாலே ஒரு குறிப்பிட்ட மண்டை ஓடு ஆணுடையதா, பெண்ணுடையதானு தீர்மானிக்கலாம் .
சின்ன பசங்களோட குரல் வளர்ந்த உடனே மாறிடுதே அது ஏன் ?
குழந்தையா இருக்கும்போது நம்மளோட குரல்வளை சின்னதா இருக்கு . குரல்வளையில காத்து படும்போது, அதுல அதிர்வுகள் உண்டாகுது . அந்த அதிர்வுகள்தான் ஒலி அலைகளை ஏற்படுத்துது நாம் வளரும்போது குரல்வளைகளும் நீளமாகுது . சின்ன குரல்வளையில் காத்து சுலபமா நுழைஞ்சு வெளிவே வந்துடும் . ஆனா, நீளமான குரல்வளையால ஒலி எழுப்பணும்னா காற்றினுடைய அழுத்தத்தை அதிகமா குடுக்க வேண்டியிருக்கும் . அதனால அதிர்வுகளும் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும் . பெண்களோட குரல்வளை நீளம்விட, ஆண்களோட குரல்வளை நீளம் அதிகம் . அதனாலதான் குரல்ல அவ்வளவு வித்தியாசம் இருக்கு .
--- தஞ்சம்மா... குஞ்சம்மா ! தொடரில் , ஜி. எஸ். எஸ் . .
---- அவள் விகடன் , டிசம்பர் 21 , 2007 .

No comments: