Friday, December 16, 2011

அப்படியா சங்கதி .

நெய்யும் தயிரும் ஏன் ?
உணவு உண்ணும் ஆரம்பத்தில் பருப்புடன் நெய் சேர்த்து உண்பதால் துவரம் பருப்பின் உஷ்ணம், பழைய மலபந்தம், வாததோஷம் ஆகியவை நீங்கும் . ஞாபக சக்தி அதிகரிக்கும் . மேனிக்கு வனப்பும் கண்ணுக்கு ஒளியும் உண்டாகும் . உணவின் முடிவில் தயிரும் உப்பும் சேர்த்து சாப்பிட்டால் உண்ட உணவு நன்கு ஜீரணமாகும் .மலச்சிக்கல்
மலச்சிக்கல் வராமல் தடுக்கும் ஆசனங்கள் .
சர்வாங்காசனம், சிவலிங்காசனம், ஹலாசனம், ஏசபாத ஆசனம், பாத ஹஸ்தாசனம், யோக முத்ரா, நாடிசுத்தி .
வாய்ப்புண் குணமாக .
மனத்தக்காளி இலையைச் சுத்தம் செய்து வாயில் பொட்டு மென்று அதன் சாறை சிறிது நேரம் வாயில் ஊறவைத்து பின்னர் அதனை உமிழ்ந்துவிட வேண்டும் . இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு வேளை செய்தால் வாய்ப்புண் ஆறும் .
சுவையும் முக்குற்றமும் .
புளிப்பும் துவர்ப்பும் அதிகரித்தால் வாதம் அதிகரிக்கும் .
உப்பும் கசப்பும் அதிகரித்தால் பித்தம் அதிகரிக்கும் .
காரமும் இனிப்பும் அதிகரித்தால் கபம் அதிகரிக்கும் .
--- ஹெல்த் சாய்ஸ் , மருத்துவ மாத இதழ் . மே 2011 .
--- இதழ் உதவி : K.S .மாதவன் , நெற்குன்றம் . சென்னை 107 .

No comments: