Saturday, November 1, 2008

உப்பில்லாப் பண்டம் !

"உப்பில்லாப் பண்டம் குப்பையிலே" -என்பதற்கு என்ன பொருள்? உப்பு- சுவை என்று தான் பொருள். சுவையில்லாததை மனிதன் உண்ணமாட்டான், தூக்கி எரிந்து விடுவான்.
உணவு அறுசுவையுடையது. இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, கரிப்பு அல்லது உவர்ப்பு ( காரம் உள்ள ) கார்ப்பு எல்லாவற்றிலும் கடைசியில் 'உப்பு' இருப்பதை கவனித்தால், உப்பு என்பதற்குச் சுவை என்ற பொதுப் பொருளே முன்பு இருந்தமை புலப்படும். உவர்ப்பு ஒன்றை மட்டுமே இன்று உப்பு என்பது அதன் சுவை மிகுதி கருதி வந்து விட்டது.
-தமிழண்ணல். ' இனிக்கும் இலக்கியம்'.

No comments: