Thursday, November 20, 2008

நிலவில் மனிதன் .II ம் முறை.

நிலவில் மனிதன் .II ம் முறை.
நிலவில் மனிதன் இரண்டாவது முறை தரையிறங்கிய சாதனை நாள் :நவம்பர் 19.
நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கும், ஆஸ்டிரினும் நிலவில் காலடி வைத்த முதல் மனிதர்கள் என்ற சரித்திர சாதனையை 1969 ஜூலை 21-ல் படைத்தனர்.அவர்கள் அமெரிகாவின் அப்பல்லோ -11 விண்கலத்தில் சென்றனர்.
இந்த சாதனையை 'ஒன்ஸ்மோர்' செய்ய, சார்லஸ் கன்ராட், ஆலன் பீன், ரிச்சர்ட் கோர்டன் என் 3 வீரர்களுடன் அப்பல்லோ 12 விண்கலத்தை 1969 நவம்பர் 14-ல் அமெரிக்கா ஏவியது.இது நவம்பர் 19 -ல் நிலவை நெருங்க, அதி இருந்து பிரிக்கப்பட்ட ' இன் ட்ரிபெட்' என்ற ஆய்வுக்கலனில் சார்லஸும் ஆலனும் நிலவுக்கு சென்றனர்.இன் ட்ரிபெட்டை ஆலன் இயக்கினார்.மேலே சுற்றிக்கொண்டிருந்த அப்பல்லோ -12 ஐ ரிச்சர்ட் இயக்கினார். நிலவின் 'புயல் கடல்'என்ற பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் மிகத்துல்லியமாக இன் ட்ரிபெட் தரையிறக்கப்பட்டது. சார்லசும் ஆலனும் அடுத்தடுத்து நிலவில் இறங்க, அமெரிக்க கொடியை சார்லஸ் நாட்டினார்.
நிலவில் இறங்கியதும், ஆய்வுக்காட்சிகளை பூமிக்கு அனுப்ப கலர் டி.வி., கேமராவை சூரியனை நோக்கி திருப்பியதால்
அதன் லென்ஸ் பாதிக்கப்பட்டு இயங்காமல் போனது.
இன் ட்ரி பெட்டில் இருந்து நிலவில் இறங்கும் ஏணி நீளம் குறைவாக இருந்தது.இதனால், கடைசி படியில் இருந்து சார்லஸ் துள்ளிக்குதித்து நிலவில் கால்பதித்தார். அப்போது, "ஆர்ம்ஸ்ற்றாங் நிலவில் கால்பதித்தபோது, அதை அவர் எடுத்து வைக்கும் சிறிய அடி என்று சொன்னார்...ஆனால், எனக்கு இது பெரிய அடி ( துள்ளிக்குதிப்பு ) " என்று 'ஜோக்' அடித்தார்.
--தினமலர். ( 19-11-2008 ).

No comments: