Thursday, November 13, 2008

'இருபது டாலர் '

பேராசிரியர் பாடத்தைத் துவக்கும் முன் ஓர் இருபது டாலர் நோட்டினை மாணவர்களிடம் காட்டினார். " யாருக்கு இந்த நோட்டு வேண்டும்? "அனைவரின் கைகளும் உயர்ந்தன. அந்த நோட்டை சிறு பந்தாகக் கசக்கிச் சுருட்டியவர், "இப்போது யாருக்கு வேண்டும்?" என்றார். மீண்டும் எல்லா கைகளும் உயர்ந்தன."இப்போதும் வேண்டுமா பாருங்கள் !" என்றவர் அந்த நோட்டை பிளாக்போர்டில் தேய்த்து தரையில் புரட்டி அழுக்காக்கினார். அப்போதும் எல்லோரும் ஹேண்ட்ஸ் அப் ! "இதை எப்போதும் மறக்காதீர்கள். இந்த இருபது டாலர் நோட்டினை நான் என்ன பாடுபடுத்தினாலும் அதன் மதிப்பு 'இருபது டாலர் ' என்பதை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்கள்.இது தான் வாழ்க்கை. நாம் எத்தனை அவமதிப்புகள், விரக்திகள், வேதனைகள், சோகங்கள், சதிகளை எதிர்கொண்டாலும் நமக்கான மதிப்பு குறையாது. நாம் எப்போதும் நாம்தான் !"
--கி. கார்த்திகேயன். ஆனந்தவிகடன். ( 06-08-2008 ).

No comments: