Friday, November 28, 2008

பற்களைப் பேணுதல் !

பற்களைப் பேணுதல் ஒரு விஞ்ஞானக்கலை. பல் துலக்கும்போது பற்குச்சி நார்களில் ஐம்பது சதம் ஈறுகளில் இருக்கவேண்டும் . ஐம்பது சத்ம்தான் பல்லில் படவேண்டும். ஒரே இடத்தில் முன்னும் பின்னுமாய் உருட்டி அழுத்தித் தேய்க்க வேண்டும். மேற்பல்லை மேலிருந்து கீழாய்; கீழ்ப்பல்லை கீழிருந்து மேலாய்.
வெளிப்புறம் துலக்குவதோடு பலபேர் முடித்துக் கொள்கிறார்கள். உட்புறமும் துலக்கவேண்டும். நித்தம் இருமுறை பல் துலக்கவேண்டும். ஓரம் தேய்ந்த பற்குச்சிகளை எறிந்துவிட வேண்டும். " பற்களையும் பாதங்களையும் தூய்மை செய்யாமல் படுக்கைக்குச் செல்லாதே " என்பது நல்ல தத்துவம்.
பாம்பு !
பாம்பிற்குத்தான் காலில்லையே பிறகென்ன பாம்பின் கால் பாம்பறியும் ?
' கால் ' என்ற சொல்லுக்கு ' வளை ' என்றோர் பொருள் உண்டு. எத்தனை தூரம் இரைதேடி மீண்டாலும் பாம்பு தன்வளையைத் தான் அறியும். என்பது அதன் பொருள்.
--வைரமுத்து . குமுதம் . ( 19-12-2007 ) .

No comments: