Sunday, November 30, 2008

ஹிட்லர் !

நேசநாடுகளின் படைகள் பெர்லின் நகரைச் சூழ்ந்துகொண்ட நிலையில் , ' தோல்வி நிச்சயம் ' என்கிற காலகட்டத்தில் ஹிட்லர் தான் செய்த தவறுகளை, கொடூரங்களை, கொலைகளை உணர்ந்தாரா ?! இல்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது....
அந்தக் கடைசி நாட்கள்....மார்ஷல் ஷுகோவ் தலைமையில் ரஷ்ய ராணுவ டாங்கிகள் பெர்லின் தெருக்களில் நுழைந்து விட்டன. இன்னொருபுறம் அமெரிக்க ஜெனரல் ஜார்ஜ் பேட்டன் நூற்றுக்கணக்கான டாங்கிகளுடன் பெர்லின் நகரில் ஓடும் புகழ்பெற்ற ரைன் நதியைக் கடந்தார்.
பாதி பாலத்தில் டாங்கியிலிருந்து கீழே குதித்த பேட்டன் ஓரமாக நின்று பாண்ட் 'ஜிப் 'பை கழற்றியது கண்டு மற்ற ராணுவ வீரர்கள் சற்றுத் திகைத்தனர். பாலத்தின் மேலேயிருந்து பேட்டன் , ரைன் நதியின் மீது சிறுநீர் கழித்தார் ! பிறகு திரும்பிப்பார்த்து புன்னகையுடன் ' இது என் நீண்ட நாள் கனவு !' என்று அவர் சொல்ல , அமெரிக்க வீரர்கள் பலமாகச் சிரித்தனர்.
-- மதன். மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் என்ற நூலில்.

No comments: