Tuesday, November 18, 2008

'எல்லாம் மாயை தானா ?'

'எல்லாம் மாயை தானா ?'
எல்லாமே மாயை என்கிறார்கள் ஞானிகள் . அது சத்தியமான வார்த்தை . உதாரணமாக , ' நில் ' என்கிறோம் . உடனே நிற்கிறீர்கள் அல்லவா ? இதுவே மாயைதான் .காரணம் எதுவுமே நிற்பதில்லை . பூமி ஒரு நொடிக்கு 460 மீட்டர் வேகத்தில் நகருகிறது . அல்லது சுழல்கிறது . அதாவது மணிக்கு 1,000 மைல்கள் வேகம் . பூமி சூரியனைச் சுற்றி வருகிறது . ஒரு வினாடிக்கு 30 கி.மீ. வேகத்தில் . மொத்தமாக நம் சூரிய மண்டலம் பால்வீதியை ( Milky Way Galaxy ) வினாடிக்கு 220 கி.மீ. வேகத்தில் சுற்றி வருகிறது . பால்வீதியும் வினாடிக்கு 1,000 கி.மீ.வேகத்தில் Great Attractor என்கிற
அகண்ட கண்டத்தில் 15 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள , ஒரு பகுதியை நோக்கி விரைந்துகொண்டு இருக்கிறது . மொத்தத்தையும் கூட்டினால் நீங்கள் வினாடிக்கு பல்லாயிரக்கணக்கான கி.மீ. வேகத்தில் ( எப்போதும் )நின்றபடி போய்க்கொண்டு இருக்கிறீர்கள் . பூமி என்பதே அந்தரத்தில் இருப்பதால் பறந்துகொண்டு இருக்கிறீர்கள் என்பதே சரியானது . இப்போது சொல்லுங்கள் . ' நில் ' என்பது மாயைதானே ?
--ஹாய் மதன். ஆனந்தவிகடன் . (03-12-2008 ).

No comments: