Tuesday, November 1, 2011

கிரெடிட் கார்டு .

கிரெடிட் கார்டு கழுத்தை இறுக்காமல் தப்பிப்பது எப்படி >
* கிரெடிட் கார்டு மூலம் செய்யும் செல்வினை 45 -- 50 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்திவிட்டால், வட்டி எதுவும் இல்லை . அந்தக் காலத்தைத் தாண்டிவிட்டால், மாதம் 2 - 3 சதவீதம் வட்டி . அதாவது, ஆண்டுக்கு 24 -36 சதவிகிதம் !
* குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணத்தைக் கட்டாவிட்டால், வட்டிக்கு வட்டி கட்டுவதோடு, அபராதக் கட்டணமாக ரூ 600 - 700 செலுத்த வேண்டி இருக்கும் . நீங்கள் ரூ.500 -க்குப் பொருள் வாங்கிக் காலம் கடத்தினால்கூட , ரூ. 600 அபராதம் உஷார் !
* வெட்டி பந்தாவுக்காக கிரெடிட் கார்டு வாங்கவே வாங்காதீர்கள் . ஆண்டு முழுக்கச் சும்மா வைத்து இருந்தாலும் ஆண்டு பராமரிப்புக் கட்டணம் என்று ரூ. 700 - 1,000 விதிப்பார்கள் !
* ஆடைகள் அல்லது வீட்டு உபயோகப் பொருட்களுக்கு .ஒரு வாரம் வரை 20 - 25 சதவிகிதம் தள்ளுபடி என அறிவித்து இருக்கிறார்கள் . அடுத்த 15 -20 நாட்களுக்குள் உங்களுக்கு போனஸ் வந்துவிடும் என்றால், தள்ளுபடி சலுகையை அனுபவிக்க கிரெடிட் கார்டு பயன்படுத்தலாம் !
* இரு சக்கர, நான்கு சக்கர வாகனக் கடன், வீடுக் கடன் வாங்க மார்ஜின் பணத்துக்கு கிரெடிட் கார்டு கடனைப் பயன்படுத்தாதீர்கள் !
* பொருட்கள் வாங்கும்போது ' ஸ்டேட்மென்ட் பில் ' போடப்படும் சுழற்சியைக் கவனிப்பது அவசியம் . பில்லில் தேதி 25 என்றால், நீங்கள் 23 -ம் தேதி பொருள் வாங்கினால், இரண்டு
நாட்கள்தான் வட்டி இல்லாக் காலம் கிடைக்கும் . 26 -ம் தேதி வாங்கினால் வட்டி இல்லா சலுகையை அதிக நாட்கள் அனுபவிக்கலாம் !
* கிரெடிட் கார்டு பெறும் முன் சம்பந்தப்பட்ட வங்கியின் விதிமுறைகள் மற்றும் நிபர்ந்தனைகளை முழுக்கப் படித்துப் புரிந்துகொள்ளுங்கள் . புரியவில்லை என்றால், தெளிவு படுத்திக்கொண்ட பிறகே ஒப்பந்தத்தில் கையோப்பம் இடுங்கள் !
* கார்டைக்கொண்டு பணம் எடுப்பதை 100 சதவிகிதம் தவிர்க்கவேண்டும் . பணம் எடுத்த உடனே வட்டி மீட்டர் ஓடத் தொடங்கிவிடும் . மேலும், பணம் எடுத்ததற்கான பறிமாற்றக்
கட்டணம் சுமார் ரூ. 250 என்பதையும் மறக்காதீர்கள் !
---சி. சரவணன் ,ஆனந்தவிகடன் , 29 . 12 . 2010 .

No comments: