Tuesday, November 29, 2011

மடியில் கனமிருந்தால்...

லேப்டாப், கம்ப்யூட்டரால் ஆண்கள் மலடாவதாக தகவல் வந்திருக்கிறது .
மடிக்கணினி என்கிறார்கள் தமிழில் . கால்களை ஒட்டி வைத்து லேப்டாப்பை இயக்கும்போது விரைகள் சூடாகி விந்து உற்பத்தி குறைகிறது என கண்டறிந்துள்ளனர் அவை உடலுக்கு வெளியே அமைந்திருப்பதே கூலாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் . உடல் உஷ்ணத்தின் ஏற்ற இறக்கம் அவற்றை பாதிக்காமல் இருந்தால் உயிரணு உற்பத்தி சீராக நடக்கும் .
ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம் வரை ஒன்றும் ஆகாது . அதற்கு மேல் சூடானால் பிரச்னை . 15 நிமிடத்தில் ஒரு டிகிரியை தாண்டிவிடுகிறது . பொதுவாக நமது ஊர் அதிகபட்ச வெப்பம் 30+ செல்சியஸ் . லேப்டாப் இயக்கினால் ஒரு மணி நேரத்தில் விரைப்பகுதியின் வெப்பம் இரண்டரை டிகிரி செல்சியஸ் ஆகிறதாம் . 15 நிமிடத்தில் ஒரு டிகிரியை தாண்டிவிடும் . மடியில் ஒரு பலகை வைத்து இயக்குபவர்கள் உண்டு . சற்று பெரிதாக இருந்தால் கால்களை விரித்து அமரலாம் . ஆனால், இதெல்லாம் பாதிப்பை தடுக்க முடியாது என்று லேட்டஸ்ட் ஆராய்ச்சியில் நிரூபணமாகி உள்ளது . பலகை இருந்தால் தொடையில் சூடு தெரியாது . அவ்வளவுதான் .
'1980களில் ஒரு மில்லி லிட்டர் விந்தில் 7 கோடி உயிரணுக்கள் இருந்தால் அவர் ஆரோக்கியமான ஆண் என்கிறார்கள் . இன்று 2 கோடி இருந்தால் நார்மல் என்கின்றனர் இன்னும் 30 ஆண்டுகள் போனால் ஒரு லிட்டரில் 100 அணுக்கள் இருப்பதே நார்மலாகிவிடும் போலிருக்கிறது ' என்கிறார் ஒரு டாக்டர் .
என்னதான் தீர்வு ? லேப்டாப்பை டெஸ்க்டாப்பாக பயன்படுத்துவதுதான் .
--- தினகரன் தலையங்கம் , நவம்பர் 7 , 2010 . ஞாயிற்றுக்கிழமை

No comments: