Wednesday, November 9, 2011

வண்ணம் உங்கள் கையில் !


ஒரு வண்ணத்துப் பூச்சியை கையில் பிடிக்கிறீர்கள் . அதை அப்படியே படம் வரைய ஆசை . அதன் இறகில் உங்களிடம் இல்லாத புது வண்ணம் இருக்கிறது . அதற்கு எங்கே போவது ?
கொரியாவின் பேனா டிசைனர் ஜின்கன் பார் என்பவர் கண்டுபிடித்து இருக்கும் இந்த புதிய பேனா உங்கள் பிரச்னையை நொடியில் தீர்த்துவிடும் . எந்த நிறமாக இருந்தாலும் அதை ஸ்கேன் செய்து, அந்த கலர் மையை உடனே தயாரிக்கும் . பேனாவை வைத்து வரைய ஆரம்பிக்க வேண்டியதுதான் !
வண்ணங்கள் கொட்டிக்கிடக்கும் துலிப் மலரோ, ஜப்பானில் வருடத்துக்கு ஒரு முறையே பூக்கும் சகுரா மர இலையோ, எந்த வித்தியாசமான வண்ணத்தையும் நொடியில் தயாரிக்கும் இந்த பேனா, ஆப்பிளை வரைய வேண்டும் என்றால் சிவப்பு வண்ணத்தைத் தண்ணீரில் கலந்து ஆப்பிளின் நிறம் வரும்வரை மல்லுக்கட்ட வேண்டியது இல்லை . ஒரு ஸ்கேனில் வேலை முடிந்துவிடும் . ஆப்பிள் ரெடி !
--- இரா. கோகுல் ரமணன் , ஹைடெக் விகடன் , 24 . 2 . 10 .

No comments: