Monday, November 28, 2011

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை !

தெரிந்து கொள்ள வேண்டிய துளிகள் .
* மூளைக்கு ரத்தம் செல்வது 2 நிமிடம் தடைபட்டால் மூளை செயலிழந்துவிடும் . மூளை செயலிழந்து விட்டால் மற்ற உறுப்புகள் நல்ல நிலையில் இருந்தாலும் அந்த நபர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை . இது போன்று மூளை செயலிழந்துவிட்ட நோயாளிகளிடம் இருந்து உறுப்புகளை எடுத்து பாதிக்கப்பட்ட நோயாளிக்கு பொருத்துவதே உறுப்பு மாற்று
அறுவை சிகிச்சையாகும் .
* இதயம், இதய வால்வு, கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம், கண்கள், கருவிழி, தோல், எலும்பு ஆகிய உறுப்புகள் இறந்தவர்களிடம் இருந்து தானமாக பெறப்படுகின்றன .
* குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உடல் உறுப்பு தானம் செய்யலாம் . 18 வயதுக்குள் இருப்பவர்கள், பெற்றோர் அல்லது காப்பாளரின் ஒப்புதல் பெறவேண்டும் .
* உடல் உறுப்புகளை விலைக்கு விற்பனை செய்தாலோ, வாங்கினாலோ உடல் உறுப்பு மாற்று சிகிச்சை சட்டத்தின்படி 5 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் .
* இந்திய அரசு 1994 ம் ஆண்டு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை சட்டத்தை கொண்டு வந்தது .
--- தினமலர் , 7 . 11 . 2010

No comments: