Saturday, November 26, 2011

' டை ' அடிக்கப் போறீங்களா ?

டை ( dye ) பாக்கெட்டுகளில் மருதாணியும், நெல்லிக்காயும், ஆலோவீரா படமும் போட்டிருந்தாலும், அதில் சேர்த்திருக்கும் ரசாயனத்தின் பெயர்களைமட்டும் பொடி எழுத்தில் போட்டிருப்பார்கள் . அதைப் படித்துப் பார்த்து முடிந்தவரை அதிகம் ரசாயனம் கலக்காத, சிறிது நேச்சுரலான ஹேர் டை மட்டும் வாங்கவும் .
முதன் முதலில் உபடோகிக்கும்பொது அந்தப் பாக்கெட்டில் குறிப்பிட்டபடி உபயோகித்துப் பார்க்கவும் . அலர்ஜி எதுவும் ஆகவில்லை என்று தெரிந்து கொண்டு பூசவும் .
நன்கு ஷாம்பூ போட்டு அலசி, வாரிய முடியில் மற்றொருவரின் உதவியோடு டை போட்டு நன்கு காயவைத்து சீப்பால் வாரி பாக்கெட்டில் குறிப்பிட்டுள்ள நேரம் மட்டும் ஊறிக் குளிக்க வேண்டும் . டை போட்டு இரவு முழுவதும் ஊறி மறுநாள் .குளிக்கக் கூடாது . அந்த ரசாயனம் மண்டையில் இறங்கி இரத்தத்தில் கலந்து ஆபத்தாகி விடக்கூடும் .
அதே போல் குளிக்கும்போது கண்டிப்பாக உச்சந்தலையில் நீர் ஊற்றக் கூடாது . அப்படிச் செய்தால் விரைவிலேயே கண்கள் பாதிப்படையும், தலைமுடியை முன்பக்கமாகப் போட்டு தலைகுனிந்தபடியே தலைமுடியை அலச வேண்டும் .
குளித்தவுடன் இறுதியில் டீ டிக்காஷன், எலுமிச்சைச் சாறு கலந்து டை போட்ட கூந்தலில் ஊற்றி, நன்கு பரவலாகத் தேய்த்து நீ ஊற்றி அலசவும் . கூந்தல் வறண்டு போகாமல் பளபளவென நன்கு சீவ வரும் . டை போடும் நாளில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் . அப்போதுதான் டையில் இருக்கும் ரசாயனத்தின் வீரியம் குறையும் .
அதே போல அடிக்கடி ' டை ' போடக் கூடாது . ' டை ' போடப் போட கூந்தல் இன்னும் அதிகமாக நரைக்க ஆரம்பித்து விடும் . விதிகளை எச்சரிக்கையுடன் பின்பற்றி, கூந்தலைப் பாராமரிக்கவும் .
--- கலைவாணி, இராசிபுரம் . மங்கையர் மலர் . நவம்பர் 2010 . இதழ் உதவி : N .கிரி , ( நியூஸ் ஏஜெண்ட் , திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி ..

No comments: