Saturday, November 5, 2011

சொந்தங்களே...


ஜப்பானில் இருக்கும் காகங்கள் டிராஃபிக் சிக்னலில் சிவப்பு விளக்கு ஒளிரும்போது ஓடிச்சென்று கார் டயர்களுக்கு முன்னால் சில கொட்டைகளை வைக்கின்றன . பச்சை விளக்கு ஒளிர ஆரம்பிக்கும்போது....அவை சாலையை விட்டு சடுதியில் பறந்து விடுகின்றன . கார்கள் ஏறி உடைத்து விட்டுப் போன கொட்டையில் இருக்கும் பருப்புகளை மீண்டும் சிவப்பு விளக்கு ஒளிரும்போது அவை எடுத்துக் கொள்கின்றன .
காகங்கள் புத்திசாலிகள் என்பதை என் மகன் செயல்முறை விளக்கம் மூலமாகவே நிரூபிப்பான் . எங்கள் வீட்டுத் தோட்டத்தில் கூடும் காகங்களுக்கு ஒரு கிண்ணத்தில் தண்ணீரும், அதன் பக்கத்திலேயே பாதம் பருப்புகளையும் வைத்துவிட்டு, அந்த இடத்தைவிட்டு விலகி வந்து விடுவான் . பாதம் பருப்புகளை எடுக்க வரும் காகங்கள், அவற்றைத் தண்ணீரில் போட்டு சற்று ஊறவைத்துச் சாப்பிடுவதை பார்த்தால்.... ஆச்சர்யத்தில் கண்கள் விரியும் !
அடைகாக்கும்போது, ' இது பெண்ணின் வேலை ' என்று ஒதுங்கிவிடாமல் அப்பா காகம், அம்மா காகம் என்று இரண்டுமே மாறி மாறி அடைகாக்கும் .
காகங்கள் தங்களின் உணவுக்காக நிலத்தில் வெவ்வேறு இடத்தில் கொட்டைகளை மறைத்து வைப்பதும், மாதங்கள் கழித்தும் பனி, மண் மூடினாலும் அபார ஞாபகத்துடன் அதே இடத்திலிருந்து அந்த கொட்டைகளை எடுப்பதும் ஆச்சர்யம் . இந்தக் கொட்டைகளை வேறு பறவைகள் திருடுவதைத் தவிர்ப்பதற்காக அவ்வப்போது இடம் மாற்றியும் வைப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம் . காகங்களுக்கு சிந்திக்கும் திறன் மட்டுமல்ல, அடுத்தவர்கள் என்ன சிந்திப்பார்கள் என்று கணிக்கும் திறனும் இருப்பது, வியப்பு .
--- மேனகா காந்தி .அவள் விகடன் , தீபாவளி மெகா ஸ்பெஷல். 5 - 11 - 2010 . இதழ் உதவி : N . கிரி , ( நியூஸ் ஏஜென்ட் - திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி .

No comments: