Thursday, November 3, 2011

' அன்ட்டிலியா....'


நீத்தா அம்பானிக்கு வீடு பற்றி ஒரு கனவு இருந்தது . ஆனால், ஒரு சராசரி பெண்ணின் கற்பனைக்குக்கூட எட்டாத காஸ்ட்லி கனவு . அதை நாற்பதாயிரம் சதுர அடியில், 4,500 கோடி ரூபாய் செலவில் நனவாக்கியிருக்கிறார் முகேஷ் அம்பானி . ' உலகிலேயே விலை உயர்ந்த வீடு ' என்ற பெருமையுடன் !
ஜன்னலைத் திறந்தால் கண் முன்னே அரபிக்கடல் விரியும் இந்த வீட்டுக்கு.... ' அன்ட்டிலியா ' என்று தேவதைக் கதைகளில் வரும் ஒரு தீவின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது .
முகேஷ் -- நீத்தா தம்பதி, அவர்களுடைய வாரிசுகள் ஆகாஷ், ஆனந்த், ஈஷா மற்றும் முகேஷின் அம்மா கோகிலா பென் என ஆறே நபர்கள் வசிக்கப் போகும் அந்த வீடு . மும்பையில் 27 மாடிகளுடன், பிரமாண்டமாக நிற்கிறது . முதல் நான்கு மாடிகளில் கார் பார்க்கிங், வீடுக்கு மேலே ஹெலிகாப்டர் தளம், நவீன வசதிகள் கொண்ட சினிமா தியேட்டர், உடற்பயிற்சிக் கூடம், நீச்சல் குளங்கள், பியூட்டி பார்லர் என்று உலகத்தரத்தில் இருக்கிறது வீடு !
" எல்லாம் உனக்காக ! " என்றபடி கடந்த விஜயதசமியன்று ( 17 . 10 . 10 . ஞாயிறு ) நீத்தாவிடம் ஒப்படைத்து பால் காய்ச்ச வைத்துவிட்டார் முகேஷ் !
ம்ம்ம் !
--- அவள் விகடன் , தீபாவளி மெகா ஸ்பெஷல். 5 - 11 - 2010 . இதழ் உதவி : N . கிரி , ( நியூஸ் ஏஜென்ட் - திருநள்ளாற ) கொல்லுமாங்குடி .

No comments: