Friday, November 18, 2011

' பறை ' -- ' தப்பு ' தமிழனின் பெருமை !


குறிஞ்சிப் பறை, நெய்தல் பறை, மருதம் பறை என ஐவகைத் திணைகளுக்கும் ஐந்து வகையான பறைகள் இருந்ததாக சங்க இலக்கியம் குறிபிடுகிறது . பக்தி இலக்கியத்திலும் பறை ஒலிக்கிறது . வேறு எந்த இசைக் கருவிக்கும் நேராத அநீதி, பறைக்கு நேர்ந்தது . ' பறை ' என்ற சொல் நேரடியாக சாதியைக் குறிப்பதால், அதற்கு ' தப்பு ' என்ற பெயர் மாற்ற வேண்டி வந்தது . மிக உன்னதமாகப் போற்றப்பட்ட ஒரு கலை காலப்போக்கில் இழிவானதாக மாற்றப்பட்டதுதான் காலப்பிழை .
' தெம்மாங்குக் கொட்டு, கல்யாணக் கொட்டு, கோவில் கொட்டு, சாவுக் கொட்டு, சல்லிமாடுக் கொட்டுன்னு இதில் நிறைய வகைகள் இருக்கு . நாற்பதுக்கும் அதிகமான அடவுகள் இருக்கு . சோழமலை, கண்டம், திசரம்னு தாள முறைகளிலும் பல வகைகள் இருக்கு . தப்புதல்னா அடித்தல்னு அர்த்தம் . அடித்தலும் ஆட்டமும் சேர்ந்து இருகுறதுனாலதான் இதைத் தப்பாட்டம்னு சொல்றோம் . வேற எந்தக் கலைக்கும் இல்லாத சிறப்பு என்னன்னா, இதில் மட்டும்தான் ஒரே நேரத்தில் ஆடிக்கிட்டே இசைக்கணும் . கலைஞனே இசைக் கருவியை உருவாக்குறதும் இதுலதான் .
--- கு. ராமகிருஷ்ணன் , ஆனந்த விகடன் . 3 . 11 . 10 .

No comments: