Tuesday, November 22, 2011

கேட்டதில் பிடித்தது !


இளைஞன் ஒருவன் எண்ணெய் வியாபாரியின் வீட்டிற்குப் போய் எண்ணெய் வாங்கினான் . வியாபாரி, வீட்டின் பின்புறம் ' செக் 'கில் எண்ணெய் ஆட்டிக்கொண்டு இருந்தார் . எண்ணெயை அளந்து விட்டுக்கொண்டே , மாட்டை ஓட்டுவது போல வாயினால் சப்தம் செய்தார் . சுற்றும் முற்றும் பார்த்த இளைஞன், " ஐயா ! மாடு எதுவும் இங்கு வரலையே, ஏன் மாட்டை விரட்டுவது போல ஒலி எழுப்புறீங்க ? " என்று வியந்து கேட்டான் .
அதற்கு அந்த வியாபாரி, " வீட்டின் பின்புறம் 'செக்கு ' ஓடிக் கொண்டிருக்கிறது . அதில் கட்டப்பட்டிருக்கும் மாடுகள் சுற்றி வந்தால்தான் செக்கில் உள்ள பொருள் அரைபட்டு எண்ணெயாக வெளியே வரும் . மாட்டின் கழுத்தில் மணி கட்டப்பட்டிருக்கும் . அதனால், மாடு சுற்றி வந்தால் மணி ஓசை கேட்கும் . மாடு சுற்றாமல் நின்று விட்டதால் ஓசை கேட்கவில்லை . அதான் மாட்டை விரட்ட ஒலி எழுப்பினேன் " என்றார் .
இதைக் கேட்ட இளைஞன், " ஐயா, மாடு ஒருவேளை நின்ற இடத்திலிருந்தே கழுத்தை மட்டும் ஆட்டி ஓசை எழுப்பினால் நீங்கள் மாடு சுற்றுவதாகத்தானே நினைத்துக் கொள்வீர்கள் " என்று ஆச்சர்யத்துடன் கேட்டான் .
அவனைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்த வியாபாரி, " நீ சொல்வது சரிதான் ... ஆனால், மாடு உங்களைப் போல பி. எ,.. எம்.எ . எல்லாம் படித்ததில்லை . அதற்கு ஏமாற்றத் தெரியாது " என்றார் .
--- சுகிசிவம் உரையிலிருந்து , கேட்டவர் : சங்கரி வெங்கட் , பெருங்களத்தூர் . மங்கையர் மலர் . நவம்பர் 2010 . இதழ் உதவி : N .கிரி , ( நியூஸ் ஏஜெண்ட் , திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி .

No comments: