Monday, November 14, 2011

தானே இயங்கும் கார் !


டிரைவர் இன்றி செல், கம்ப்யூட்டரால் இயக்கலாம். நாகை வாலிபர் கண்டுபிடித்து அசத்தினார் .
நாகப்பட்டினம் அருகே விழுந்தமாவடியைச் சேர்ந்த கார்த்திக் ( 20 ) என்பவர் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் செயற்கைக்கோள் மூலம் வீட்டில் இருந்தபடியே இயக்கக்கூடிய குட்டிக் காரை உருவாக்கியுள்ளார் .
கம்ப்யூட்டர், செல்போன் உதவியுடன் இயங்கும் இந்த கார், பேட்டரி மூலம் ஓடக்கூடியது . இரவு நேரங்களில் இந்த காரை ரோட்டில் விட்டுவிட்டு அதில் ஒரு கேமராவை பொருத்திவிட்டால் போலீசார் கண்காணிப்புப் பணிகளை தங்கள் அலுவலகத்தில் இருந்தபடியே கம்ப்யூட்டரில் நேரடியாக பார்த்துக் கொள்ளலாம் .
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொழிற்சாலைகளில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு டிரைவர் இல்லாமலேயே சரக்குகளை வாகனத்தில் ஏற்றி அனுப்பிவைக்க முடியும் . வீட்டில் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்தபடியே அந்த வாகனத்தை இயக்கி எந்த இடத்துக்கும் சென்று, திரும்பி வர வைக்க முடியும் . தனியாக டிரைவர் தேவையில்லை .
மேலும், இந்த வாகனத்தை ராணுவத்திலும் பயன்படுத்த முடியும் . குறிப்பாக தீவிரவாதிகள் நடமாட்டத்தை எளிதில் கண்காணிக்கலாம் . அதேபோல காடுகளில் அபாயகரமான விலங்குகளை அருகில் சென்று படமெடுக்கவும் பயன்படுத்த முடியும் என்கிறார் கார்த்திக் .
---- தினமலர் ,அக்டோபர் 30 , 2010 .

No comments: