Sunday, November 27, 2011

நம்பிக்கைதான் !

நம்பிக்கைதான் -- மனிதனை நகர்த்துகிறது !
ஒவ்வொரு முறை செஞ்சுரி அடிக்கும்போதும் --
பெவிலியனுக்கு பேட் ; விசும்பிற்கு விழி; என உயர்த்திக் காட்டி நன்றி உரைப்பது, சர்ச்சிலின் சம்பிரதாயம் !
' அ ' னாவில்தான் -- படத்தின் முதல் உரையாடல் தொடங்க வேண்டும் என்பது, அமரர் திரு. ஏவி. எம். அவர்கள் காத்து நின்ற மரபு !
அஞ்சாம் ரீல்தான், ரீ - ரிக்கார்டிங்கை ஆரம்பிக்கவேண்டும் என்பது -- மெல்லிசை மன்னர் திரு. எம்.எஸ்.வி அவர்களின் சென்டிமென்ட் !
பாடல்களின் மேல் -- ஸ்வரங்களைப் பென்சிலால்தான் குறித்துக்கொள்வார் -- வெண்கலக் குரல் வேந்து, திரு. டி.எம்.எஸ் அவர்கள் . பென்சில் சீவ ப்ளேடும் எடுத்து வருவார் !
தன்னுடைய கார்களின் நம்பர்களின் கூட்டுத் தொகை ஏழாக இருக்க வேண்டும் என்பதில், புரட்சித் தலைவர் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் உறுதியாக இருப்பார்கள் . படங்களின் பெயர்களும் கூடிய வரையில் ஏழெழுத்தில் வருவதை விரும்புவார் . உதாரணம் -- ' நாடோடி மன்னன் '; ' அரச கட்டளை '; ' உரிமைக் குரல் '; இத்யாதி இத்யாதி !
' ம '; ' மா '; ' மு '; என்று மகர வரிசையில் நான் அவரோடு எழுதும் பாடல்கள் தொடங்கப்பெற்றால், அவை பெரிதும் ஹிட் ஆகின்றன என்பது திரு.ஏ.ஆர். ரஹ்மானின் கணிப்பு ; உதாரணங்கள் :
' மரியா ! மரியா ! '
' மாயா மச்சீந்தரா ! '
' முக்காபுலா ! '
நம்பிக்கைதான் -- மனிதனை
நகர்த்துகிறது !
--- நினைவு நாடாக்கள் ஒரு rewind , தொடரில் வாலி . ஆனந்த விகடன் .10 . 11 . 10 .

No comments: