Friday, November 25, 2011

இதய கோளாறை காணும் கருவி !

தமிழக விஞ்ஞானி அறிமுகம் .
இதய கோளாறை சில நொடிகளில் துல்லியமாக கண்டுபிடிக்கும் கருவி .
சென்னையைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி அரவிந்த் தியாகராஜன் கண்டுபிடித்தார் . அது பற்றி அவர் கூறியதாவது :
பண்டைய காலங்களில் ஒலி மூலமாக உடலில் ஏற்படும் கோளாறுகளை கண்டுபிடித்து வந்தனர் . அந்த முறையில்தான் டாக்டர்கள் தற்போது உபயோகிக்கும் ஸ்டெதஸ்கோப் கருவியும் உருவாகியது . இதேபோன்று இதயத்தில் ஏற்படும் ஒலியை டிஜிட்டல் ஒலியாக மாற்றிக் காட்டும் புதிய வகை ஸ்டெதஸ்கோப் கருவியை ( போனோடாக் ) கண்டுபிடித்துள்ளேன் . இந்த கருவி மூலம் ஒருவரது இதயத்தில் இருக்கும் வால்வு கோளாறுகளை ஒரு சில நொடிகளில் கண்டுபிடிக்கமுடியும் . சாதாரணமாக லப்டப் என்று சத்தம் கேட்டால் இதயத்தில் எந்த கோளாறும் இல்லை என்று அர்த்தம் . இதயத்தின் வால்வு பகுதியில் அடைப்பு மற்றும் ஓட்டை இருந்தால், புதிய கருவியில் இருந்து வரும் டிஜிட்டல் ஒலி மூலம் எளிதாக கண்டுபிடித்து, அவருக்கு இதய கோளாறு இருப்பதை 100 சதவிகிதம் உறுதி செய்ய முடியும் .
தற்போது இதயகோளாறுகளை எக்கோ கார்டியோ கிராம் மூலம் கண்டுபிடிக்கமுடியும் . இதற்கு அதிக நேரமும் செலவும் ஆகும் . மேலும், இந்த வசதி நகரத்தில் மட்டுமே உள்ளது .டிஜிட்டல் ஸ்டெதஸ்கோப் கிராமப்புறங்களிலும் பயன்படுத்த முடியும் என்றார் அரவிந்த் தியாகராஜன் .
--- தினகரன் , 3 நவம்பர் .2010 .

No comments: